குழந்தைகளை கடற்கரைக்கு அழைத்துச்செல்லும் போது...

Published By: Devika

30 Nov, 2022 | 11:51 AM
image

வார இறுதி நாட்கள் மற்றும் திருவிழா சமயங்களில் குழந்தை­களை பொருட்காட்சி, பூங்கா, திரை­ய­ரங்கு, கடற்கரை போன்ற இடங்­க­ளுக்கு பெற்றோர் அழைத்துச்­செல்­வது வழக்கம். 

அவ்வாறு, கடற்கரைக்குச் செல்லும் சமயங்களில் குழந்தைகளின் வய­துக்­கேற்ற பாதுகாப்பு நடவடிக்­கை­களை மேற்கொள்வது அவசியம். 

வீட்டிலிருந்து புறப்படும்போது குழந்தைகளிடம் கடற்கரையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என தெளிவாக எடுத்துக் கூறுங்கள். சூரியக் கதிர்களிலிருந்து சருமத்­தைப் பாதுகாக்க சன்ஸ்க்ரீன் க்ரீம் பூசிக்கொண்டு செல்ல வேண்டும். 

கடற்கரை மணலில் புதைந்தி­ருக்கும் பொருட்களை கையில் எடுத்து விளையாடக் கூடாது என்று குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். 

கடற்கரையில் யாரேனும் தின்­பண்டங்கள் கொடுத்தால் அதை வாங்கிச் சாப்பிடக் கூடாது என்று அவர்களிடம் தெரிவிக்க வேண்டும். கடற்கரையில் விற்கப்படும் பல்­வேறு தின்பண்டங்களை சாப்பிட குழந்தைகள் விரும்புவார்கள். இந்த விஷயத்தில் அவர்களது உடல்­நலத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். 

குழந்தைகள் கரையில் அமர்ந்து விளையாடினாலும், அருகிலேயே இருந்து பெற்றோர் பார்த்துக்கொள்ள வேண்டும். பெற்றோர்களின் செல்­போன் எண்களை குழந்தைகள் அறிந்திருக்க வேண்டும். எதிர்­பாரா­மல் அவர்கள் வழிதவறிவிட்டால், செல்போன் எண்ணை அருகில் உள்ள பெரியவர்களிடம் தெரிவித்து தொடர்புகொள்ள வேண்டும் என்று குழந்தைகளுக்கு பெற்றோர் கற்றுத்­தர வேண்டும். 

10 வயதுக்குட்பட்ட குழந்தைக­ளுடன் கடற்கரைக்குச் செல்லும்போது கூடுத­லாக ஆடைகளை எடுத்துச்­செல்வது நல்லது. மதியமே கிளம்பு­வ­தாக இருந்­தால் குழந்தை­களின் குடை, தொப்பி ஆகியவற்று­டன் கண்டிப்பாக குடிநீர் போத்தலையும் கொண்டு செல்ல வேண்டும். அத்­துடன் அவர்கள் தண்­ணீரில் விளை­யாடுவதற்கு ஏது­வான செருப்புகளை அணிவித்து அழைத்துச் செல்லலாம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்