கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதத்தின் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
இந்த விபத்து இன்று பிற்பகல் 1.30 மணியளவில் நாவலப்பிட்டி கலபொட புகையிரத நிலையத்திற்கும் தெஹிந்த புகையிரத நிலையத்திற்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி குறித்த புகையிரதம் சென்று கொண்டிருந்த வேளை தெஹிந்த புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் குறித்த இளைஞர் புகையிரதத்தின் முன் பாய்ந்து பாய்ந்துள்ளார்.
இதனால் உடல் நசுங்கி குறித்த இளைஞர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் ஹட்டன் புகையிரத நிலைய உத்தியோகத்தரிடம் அவரது சடலம் கையளிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை அறிந்த ஹட்டன் பொலிஸார் இளைஞரின் சடலத்தினை பொறுப்பேற்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
எனினும் இவ்வாறு உயிரிழந்தவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கும் பொலிஸார் இவர் 25 வயது மதிக்கதக்கவர் எனவும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM