சீனாவில் கொவிட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தணிகின்றன - அரசாங்கத்தின் கெடுபிடிகள் தீவிரமடைகின்றன

Published By: Rajeeban

29 Nov, 2022 | 01:07 PM
image

bbc

கொவிட் கட்டுப்பாடுகளிற்கு எதிராக சீனாவில் கடந்த ஒரு வாரகாலமாக காணப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் தணிந்துள்ளன.

அதேவேளை அரசாங்கம் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

பல நகரங்களில் பெருமளவு பொலிஸ் பிரசன்னத்தை காணமுடிவதாகவும் சில ஆர்ப்பாட்ட முயற்சிகள் ஒடுக்கப்பட்டதாகவும் வெற்றிபெறவில்லை எனவும் தகவல்கள் வெளியாகின்றன.

பொதுமக்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை அவர்களது கையடக்க தொலைபேசிகள் சோதiனையிடப்பட்டமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் வெளிநாடுகளில் சீன மக்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர் உலகின் பல நகரங்களில்; ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.

மேற்கு சீனாவின் உரும்கி நகரில் உள்ள உயர்மாடிக்கட்டிடமொன்றில் தீப்பிடித்து பத்து பேர் உயிரிழந்ததை தொடர்ந்து கடந்த வார ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின.

கொவிட் கட்டுப்பாடு காரணமாக பொதுமக்களால் அந்த கட்டிடத்திலிருந்து தப்ப முடியவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் உள்ளுர் அதிகாரிகள் இதனை நிராகரித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கொவிட் கட்டுப்பாடுகளை முடிவிற்கு கொண்டுவருமாறு கோரி ஆயிரக்கணக்கானவர்கள் வீதிகளில் இறங்கினார்கள்.

முன்னர் ஒருபோதும் இல்லாத வகையில் சிலர் சீன ஜனாதிபதி பதவி விலகவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

இதேவேளை திங்கட்கிழமை சங்காயில் உள்ள பகுதியொன்றில் திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டங்கள் அதிகாரிகளின் கடும் நடவடிக்கைகள் காரணமாக சாத்தியமாகவில்லை.

ஆர்ப்பாட்டங்களை தடுப்பதற்காக முக்கிய வீதியில் பாரிய தடுப்புகளை பொலிஸார் ஏற்படுத்தியிருந்தனர்.பலர் கைதுசெய்யப்பட்டனர்.

மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்காக ஒன்றுகூடவேண்டிய இடம்என டெலிகிராம் மூலம் தெரிவிக்கப்பட்ட பகுதிகளில் ( இரு நகரங்கள்) பொலிஸார் தங்கள் நடவடிக்கைகளை பலப்படுத்தியிருந்தனர்.

ஹங்சூ நகரில் இடம்பெற்ற சிறிய ஆர்ப்பாட்டம் கைதுகளை தொடர்ந்து நிறுத்தப்பட்டது.

இதேவேளை ஹொங்கொங்கில் நகரத்தின் மத்தியிலும் சீனா பல்கலைகழக வளாகத்திலும் பலர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். சீனாவில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிற்கு ஆதரவு தெரிவித்தே இவர்கள் ஆர்ப்பாட்டங்களில்  ஈடுபட்டனர்.

லண்டன் பாரிஸ் டோக்கியோநகரங்களிலும்  மற்றும் ஐரோப்பா அமெரிக்காவின் பல்கலைகழகங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

பொலிஸார் பொதுமக்களின் கையடக்கதொலைபேசிகளை சோதனையிடுகின்றனர் விபிஎன் உள்ளதா என சோதனையிடுகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவில் தடைசெய்யப்பட்ட டுவிட்டர் டெலிகிராம் போன்றவற்றை பொதுமக்கள் பயன்படுத்துகின்றனரா எனவும் பொலிஸார் சோதனையிடுகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட எனக்கும் ஐந்து நண்பர்களிற்கும் பொலிஸாரிடமிருந்து அழைப்பு வந்தது நாங்கள் எங்கிருக்கின்றோம் என கேட்டார்கள் என பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் தொலைபேசியில் தகவல்களை வழங்க தவறியதை தொடர்ந்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அவர்களின் வீடுகளிற்கு சென்றுள்ளார்-ஆர்ப்பாட்டம் ஒன்றுகூடல் சட்டவிரோதமானது என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கத்தாரில் வான்வெளியில் ஏவுகணை இடைமறிப்பு: சிதறிய...

2026-07-12 17:23:53
news-image

ஒமான் கடற்கரையில் கப்பல் மீது தாக்குதல்:...

2026-07-12 17:02:18
news-image

ஈரான் ஏவிய ஏவுகணைகள், ட்ரோன்களை இடைமறித்தது...

2026-07-12 14:43:09
news-image

கத்தாரின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத்...

2026-07-12 13:01:57
news-image

முன்னாள் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா...

2026-07-12 12:00:22
news-image

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் மீது ஈரான்...

2026-07-12 15:45:39
news-image

கூகுள் நிறுவனத்தின் இந்திய வம்சாவளி உயர்...

2026-07-12 11:07:51
news-image

கனடாவில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி,...

2026-07-12 08:57:33
news-image

வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து :...

2026-07-11 16:41:25
news-image

என்னைத் படுகொலை செய்ய முயன்றால் ஈரான்...

2026-07-11 13:44:03
news-image

ஹோர்முஸ் நீரிணை நெருக்கடி : ஈரானிய...

2026-07-11 13:30:51
news-image

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் இரு...

2026-07-11 10:46:46