ஈரானில் கடந்த செப்டெம்பரில் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்ததையடுத்து இதுவரை 300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என ஈரானின் புரட்சிகர காவல் படையின் ஜெனரல் ஒருவர் இன்று தெரிவித்துள்ளார்.
ஹிஜாப் அணியாததால் கைது செய்யப்பட்ட மாஷா அமீனி எனும் யுவதி, பொலிஸ் காவலிலிருந்த நிலையில் கடந்த செப்டெம்பர 16 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். அவரின் மரணத்துக்கு எதிராக ஈரானில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஈரானிய புரட்சிகர காவல் பiடையின் வான் பிரிவுத் தலைவரான பிரிகேடிய ஜெனரல் அமீரலி ஹஜிஸாதேஹ் இன்று கூறியுள்ளார்.
'அப்பெண்ணின் மரணத்தினால் ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய தரவுகள் என்னிடமில்லை. ஆனால், இச்சம்பவம் இடம்பெற்றதிலிருந்து இந்நாட்டில் சிறார்கள் உட்பட 300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் எனக் கருதுகிறேன்' என அவர் கூறியுள்ளார்.
இந்த உயிரிழப்பு எண்ணிக்கையானது ஆர்ப்பாட்டக்காரர்களுடனான மோதலில் உயிரிழந்த அல்லது கொல்லப்பட்ட பொலிஸார், படையினரின் எண்ணிக்கையும் அடங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஒஸ்லோவைத் தளமாக்க கொண்ட ஈரானிய மனித உரிமைகள் குழுவானது குறைந்தபட்சம் 416 பேர உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM