சாரதி மீது தாக்குதல் : இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

Published By: Vishnu

29 Nov, 2022 | 12:59 PM
image

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியாசாலை ஊழியர்கள் இன்று (29) காலை தொடக்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் கடந்த வியாழக்கிழமை சிறுவன் ஒருவர் மீது பேருந்து மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து அங்கிருந்தவர்களால் விபத்தை ஏற்படுத்திய இ.போ.ச சாரதி மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சாரதி அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் தாக்குதல் நடாத்தியதாக தெரிவித்து சந்தேக நபர் ஒருவர் கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

பொலிசாரின் இச் செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று யாழ் பிராந்திய சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

எனினும் தீர்வு எதுவும் கிடைக்காத நிலையில் இன்று வடக்கு மாகாணம் தழுவிய பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

வட மாகாணத்தின் இலங்கை போக்குவரத்து சபையின் சாலைகள் இப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் அதற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா சாலையினரும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55