வீதியை புனரமைக்குமாறு கோரி மக்கள் போராட்டம்!

Published By: Vishnu

29 Nov, 2022 | 04:25 PM
image

786 மற்றும் 782 பேருந்து வழித்தட வீதிகளை புனரமைக்குமாறு கோரி மக்கள் இன்றையதினம் வீதி மறியல் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

காரைநகருக்கு செல்லும் குறித்த இரண்டு பிரதான வீதிகளும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் அந்த வீதிகளை திருத்தம் செய்து தருமாறு கோரி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனால் போக்குவரத்துகள் முடங்கின.

இந்த போராட்டத்தில் வலி. மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளர், வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

வலி.மேற்கில் உள்ள வீதிகளை  புனரமைக்குமாறு கோரிக்கை விடுத்து மூளாய் அரசடி சந்தியில் இன்று {29} செவ்வாய்க்கிழமை வீதி மறிப்பு கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. 

இவ்வீதிகளில் அடிக்கடி விபத்துக்கள் இடம்பெற்று பலர் காயமடைந்துள்ளனர் எனவும் மக்கள் தெரிவித்தனர். 

நிறைமாதக் கர்ப்பவதிகள் மற்றும் தீவிர நோயாளர்களை இவ்வீதிகளூடாகக் கொண்டுசெல்லும்போது அவர்கள் வலியால் உயிரிழக்கக்கூடிய அபாயம் உள்ளது எனவும் அவர்கள் தெரிவித்தனர். 

போராட்டத்தின் முடிவில் வடக்கு மாகாண ஆளுநர், யாழ்.அரச ஆகியோருக்கு முகவரியிடப்பட்ட கடிதங்கள் வலி.மேற்கு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. இதன் பிரதி வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெறுதிமதி சேர் வரி திருத்தச் சட்ட...

2023-12-11 17:59:32
news-image

யாழ். பல்கலை முன்னாள் கலைப்பீட மாணவர்...

2023-12-11 17:44:17
news-image

எரிபொருள் விலை அதிகரிப்பினால் கடற்றொழிலாளர்களின் பாதிப்புக்கு...

2023-12-11 16:58:39
news-image

மலையக மக்கள் குறித்து பேச்சு வார்த்தை...

2023-12-11 16:59:13
news-image

பேலியகொடையில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

2023-12-11 17:08:33
news-image

யாழ்.நகர் பகுதியில் அதிகரித்துள்ள வழிப்பறிக் கொள்ளை

2023-12-11 17:06:33
news-image

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு...

2023-12-11 16:00:40
news-image

பங்களாதேஷ் பெண்ணிடம் கொள்ளையிட்ட இருவர் கைது

2023-12-11 15:57:02
news-image

கொழும்பு தமிழ் மக்களை இலக்கு வைத்து...

2023-12-11 16:03:35
news-image

அநுராதபுரம், களுத்துறை மாணவிகள் மத்தியில் போதை...

2023-12-11 15:20:09
news-image

பண்டாரகமவில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர்...

2023-12-11 15:19:19
news-image

தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் தபால்...

2023-12-11 15:46:41