தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான யோகி பாபு, நடிகராக அறிமுகமாக 13 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, அவர் தற்போது பங்கு பற்றி வரும் 'சூர்யா42' படப்பிடிப்பு தளத்தில் பிரத்யேகமாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
இதன் போது படத்தின் இயக்குனர் சிவாவிற்கு நடிகர் யோகி பாபு கேக் ஊட்டி தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
அதன் போது பேசிய யோகி பாபு, '' இயக்குநர் சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் அமீர் அண்ணன் கதையின் நாயகனாக நடித்த 'யோகி' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானேன். இதற்காக அமீர் அண்ணனுக்கும், சுப்ரமணிய சிவாவிற்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதன் பிறகு சின்னத்திரையில் 'லொள்ளு சபா' மூலம் இயக்குநர் ராம் பாலா பிரபலமடைய செய்தார். இதற்காகவும் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதனைத் தொடர்ந்து திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறேன்.
இதற்கு தொடர்ச்சியாக ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கும், இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், திரையுலக பயணத்தில் 13 ஆண்டுகளை நிறைவு செய்து, 14வது ஆண்டில் தொடரும் தருணத்தில் நன்றியும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM