இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநில கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட், ஓர் ஓவரில் 7 சிக்ஸர்களை அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
விஜய் ஹஸாரே கிண்ணத்துக்கான 50 ஓவர் கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெற்ற உத்தரபிரதேச அணிக்கு எதிரான கால் இறுதிப் போட்டியில் அவர் இச்சாதனையை படைத்தார்.
49 ஆவது ஓவரில் உத்தரப் பிரதேச வீரர் ஷிவா சிங் பந்துவீசினார்.
அந்த ஓவரில் தொடர்ச்சியாக 7 சிக்ஸர்களை ருதுராஜ் கெய்க்வாட் விளாசினார்.
அந்த ஓவரின் 5 ஆவது பந்து நோ போல் ஆக அமைந்தது. அதிலும் ருதுராஜ் சிக்ஸர் விளாசியதால், குறித்த ஓவரில் மொத்தமாக 43 ஓட்டங்களை அவர் பெற்றார்.
அஹமதாபாத் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் 159 பந்துகளில் 10 பவுண்டறிகள், 16 சிக்ஸர்கள் உட்படஆட்டமிழக்காமல் 220 ஓட்டங்களைப் பெற்றார்.
ஏ தர கிரிக்கெட் போட்டிகளில் இது புதிய உலக சாதனையாகும். ஏ தரப் போட்டியொன்றின் ஓர் இன்னிங்ஸில் 16 சிக்ஸர்களை அடித்த ரோஹித் சர்மாவின் சாதனையையும் ஷிவா சிங் சமப்படுத்தினார்.
இப்போட்டியில் மாஹாராஷ்டிரா அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 330 ஓட்டங்களைக் குவித்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM