தம்பலகாமம் பிரதேச சாகித்திய விழா

Published By: Nanthini

28 Nov, 2022 | 01:44 PM
image

ம்பலகாமம் பிரதேச சாகித்திய விழா நிகழ்வுகள் கடந்த சனிக்கிழமை (நவ 26) தம்பலகாமம் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சாகித்திய அதிகார சபையின் ஏற்பாட்டில் தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது உரையாற்றிய தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் ஏ.ஜீ.சம்பிக்க பண்டார "மூவின மக்களும் செறிந்து வாழக்கூடிய இப்பிரதேசத்தில் அனைவரையும் இணைத்து இவ்விழாவினை ஏற்பாடு செய்தமை வரவேற்கத்தக்கது.

இவ்வாறான விழாக்கள் இனங்களுக்கிடையே நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட ஏதுவாக அமையும்" என்று தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம உரையாற்றுகையில், 

"பாரம்பரிய கலை கலாசார அம்சங்கள் அருகி வரும்போது அதனை மீள உயிர்ப்பிப்பதற்காக வருடத்துக்கு ஒரு தடவையேனும், இவ்வாறான கலாசார நிகழ்வுகளை நடாத்துவது சிறப்புக்குரியது. 

அத்துடன் அனேகமான பாடசாலை மாணவர்கள் பிரதேச மட்ட போட்டிகளில் கலந்துகொண்டு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களை  பெற்றுக்கொண்டுள்ளனர். இது நல்லதொரு திருப்புமுனையாகும். காரணம், தற்போதைய சூழ்நிலையில் சமூக ஊடகங்களின் பாவனை காரணமாக பாரம்பரிய அம்சங்கள், எழுத்தாற்றல், ஆக்கத்திறன் என்பன எம்மை விட்டு தூரமாகிச் செல்கின்றன. அவ்வாறானதொரு நிலையில் சிறுவர்களின் இலக்கியம் தொடர்பான ஆர்வம் இத்துறை தொடர்பான வளர்ச்சிக்கு வலு சேர்க்கும்" என்று தெரிவித்தார். 

இதன்போது தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி. ஜெ. ஸ்ரீபதி உரையாற்றுகையில்,

"பல இயற்கை வளங்களை கொண்ட ரம்மியமான பிரதேசமே தம்பலகாமம். எம்மவர் மத்தியில் நிலவிய பல பாரம்பரிய கலாசார அம்சங்கள் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் புதிய சமூகத்தினர் மத்தியில் அருகி வருகின்றது. எனவே, பாரம்பரிய அம்சங்களை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும்" என்று தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்வில் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச இலக்கிய பேரவை இணைந்து  'ஏர் முனை' சஞ்சிகையின் மூன்றாவது வெளியீட்டை வெளியிட்டதுடன், பிரதேச மட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களை பிரதம அதிதி, கெளரவ அதிதி, பிரதேச செயலாளர்  உள்ளிட்ட அதிகாரிகளின் ஊடாக வழங்கினர். 

அத்துடன் இந்நிகழ்வில் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், சர்வமத தலைவர்கள், கலைஞர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08