(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)
இலங்கையில் முதல்தடவையாக கசினோவுக்கு அனுமதிப்பத்திரம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
என்றாலும் கசினோ ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை இல்லாமல் அரச நிதி குழுவினால் அதற்கு அனுமதி வழங்க முடியாது என எதிர்க்கட்சி உறுப்பினரும் அரச நிதிக்குழுவின் தலைவருமான ஹர்ஷடி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழைம (நவ. 28) அரச நிதி குழுவின் செயலாற்றுகை அறிக்கையை சபைக்கு சமர்ப்பித்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரச நிதிக்குழுவுக்கு வழங்கப்பட்டிருந்த கசினோ வியாபாரத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் மற்றும் கசினோ வியாபாரத்தை ஒகுங்குபடுத்தல் சட்டமூலத்தின் விதிமுறைகளுக்கு அரச நிதிக்குழுவினால் அனுமது வழங்கவில்லை.
ஏனெனில் இலங்கையில் முதல் தடவையாக கசினோவுக்கு அனுமதி பத்திரம் வழங்கவே இந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கின்றது.
ஆனால் உலகில் கசினோ அனுமதி பத்திரம் வழங்கும்போது அதற்கு கசினோ ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை ஒன்று இருக்கின்றது. ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் கீழே கசினோ நிறுவனங்கள் கண்காணிக்கப்படுகின்றன.
ஆனால் இலங்கையில் அவ்வாறானதொரு ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை இல்லை. அதனால் கசினோவுக்கு அனுமதி பத்திரம் வழங்கும் நடவடிக்கை மற்றும் கசினோ தொடர்பான அனைத்து அதிகாரமும் அமைச்சரு்க்கு கீழே வருகின்றது.
அரசாங்கத்துக்கு கசினோவை விரைவாக அனுமதித்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது என்பது எமக்கு தெரியும். அதனால்தான் விரைவாக இந்த சட்டமூலத்தை சமர்ப்பித்திருக்கின்றது.
அதனால் கசினோ தொடர்பான கண்காணிக்கும் அதிகாரசபையை எந்த காலத்துக்குள் அமைப்பது என்ற கால எல்லையை எங்களுக்கு வழங்குமாறு நாங்கள் நிதி அமைச்சு அறிவித்திருக்கின்றோம்.
ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை ஒன்று இல்லாமல் கசினோவுக்கு அனுமதி வழங்குவது கடினமான விடயம். உலகில் எங்குவேண்டுமானாலும் கசினோ அனுமதி பத்திரம் வழங்கும்போது அங்கு கசினோ ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை இருக்கின்றது.
அதனால் கசினோ ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை அமைப்பது தொடர்பில் முறையான கால எல்லை ஒன்றை வழங்கும் போது கசினோ தொடர்பான சட்டமூலங்களை எமக்கு அனுமதிக்க முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM