மஹாவெல, மானின்கமுவ பிரதேசத்தில் பெண் ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் வீட்டில் இருந்து காணாமல்போயுள்ளதாக மஹவெல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து வீட்டைச் சோதனயிட்டபோதே பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் பல்லேபொல, மானின்கமுவ பிரதேசத்தில் வசித்த 55 வயதுடையவராவார்.
சடலம் தொடர்பில் நீதிவான் விசாரணைகள் இடம்பெற்றபோது, தலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கிய காயங்கள் காணப்பட்டமையால் இது கொலைச் சம்பவம் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் தனது சகோதரன் வீட்டில் வசித்து வந்த திருமணமாகாத பெண்ணாவார்.
சடலம் மாத்தளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மஹாவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM