போதைப்பொருள் கடத்தலிற்கு சிங்கப்பூர் பாணியில் மரணதண்டனை - ஆராய்கின்றது அரசாங்கம்

Published By: Rajeeban

28 Nov, 2022 | 11:05 AM
image

போதைப்பொருள் தொடர்பிலான குற்றங்களிற்கு சிங்கப்பூர் வழங்கும் தண்டனைகள் குறித்து  இலங்கை அரசாங்கம் ஆராய்கின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மரண தண்டனை குறித்தும் இலங்கை அரசாங்கம் ஆராய்கின்றது போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பயன்பாட்டினை கட்டுப்படுத்துவதற்காக மரண தண்டனை குறித்து  இலங்கை  அரசாங்கம் ஆராய்கின்றது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிங்கப்பூரின் சட்டங்களை ஆராயும் நடவடிக்கைகள் பூர்த்தியாகிவிட்டன மரண தண்டனை  குறித்து இறுதி முடிவு இன்னமும்  எடுக்கப்படவில்லை என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையின் தற்போதையை சட்டங்களை வலுப்படுத்துவதற்கு நாங்கள் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் சிங்கப்பூரும் இதே பிரச்சினையை எதிர்கொள்கின்றது ஆனால் அங்கு கடுமையான சட்டங்கள் காணப்படுகின்றன, போதைப்பொருள் தொடர்பான விடயங்களை கையாள்வதற்கான  ஏனைய சட்டங்களும் உள்ளன,சிங்கப்பூர் எடுத்துள்ள ஏனைய நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்கின்றோம் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

1976 முதல் இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு தரப்புகள் மற்றும் புலனாய்வு தரப்புகளுடன் இணைந்து போதைபொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளில் கரையோர காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ள  விடயமறிந்த வட்டாரங்கள் போதைப்பொருளை இடமாற்றும் பகுதியாக  இந்து சமுத்திரம் மாறியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளன.

1973ம் ஆண்டின் சட்டத்தின் கீழ் போதைப்பொருள் தொடர்பில் சிங்கப்பூரில் மரணதண்டனையும் வழங்கப்படுகின்றது.

குறிப்பிட்ட போதைப்பொருளின் வகை மற்றும் அளவு தண்டனையை தீர்மானிக்கின்றது.

தனிநபர் ஒருவருக்கு கசையடி தண்டனை சிறைத்தண்டனை அல்லது மரணதண்டனையை விதிக்க முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிய கடற்பரப்பில்...

2023-05-29 22:10:56
news-image

இன, மத வெறுப்பை கக்கி வரும்...

2023-05-29 22:33:01
news-image

பரீட்சைகளை நடத்துவது மாணவர்களின் வசதிக்கு அன்றி ...

2023-05-29 22:30:27
news-image

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பது...

2023-05-29 22:18:09
news-image

தமிழ் மக்களின் இருப்பை அச்சுறுத்தும் இனவாத...

2023-05-29 22:15:50
news-image

புதுக்குடியிருப்பில் குளத்தினை ஆக்கிரமிக்கும் தனி நபர்...

2023-05-29 22:01:09
news-image

முஸ்லிம்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதி...

2023-05-29 21:57:12
news-image

பேராசிரியர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் வடக்கு, கிழக்கு...

2023-05-29 17:42:27
news-image

புத்தசாசனத்துக்கு பாதிப்பெனக் குறிப்பிட்டு உண்மை பிரச்சினைகளை...

2023-05-29 15:42:48
news-image

புத்தசாசனத்தை அவமதித்து சமூக வலைத்தளங்களில் பிரபல்யமடையும்...

2023-05-29 14:35:56
news-image

அருவக்காலு குப்பைகளை இறக்குதல், ஏற்றுதல், குப்பைகளை...

2023-05-29 17:37:32
news-image

இந்திய அரசாங்கம் நட்டஈடு கோரியதாக எந்த...

2023-05-29 12:59:56