பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கொனஹேன முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கம்பஹா, இம்புல்கொட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 5 கிராம் 460 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவர் திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்தவர் எனவும், கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி மினுவாங்கொடை பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் எனவும் தெரிய வந்துள்ளது.
மேலும், இவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், நவம்பர் 25ஆம் திகதி இரவு இம்புல்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைக்கு உதவிய மற்றுமொரு சந்தேக நபர், கைக்குண்டு, 16 கிராம் ஹெரோயின், 200 மில்லிகிராம் ஹெரோயின், இலத்திரனியல் தராசு மற்றும் 2 கைத்தொலைபேசி ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM