வரவு - செலவுத் திட்டம் 2023 இல் உள்ள நான்கு குறைபாடுகள்

Published By: Nanthini

27 Nov, 2022 | 04:08 PM
image

(சுனில் அபயவர்தன)

னாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தனது வரவு - செலவுத் திட்ட உரையை ஆற்றியபோது, “நாங்கள் எங்கே தவறு செய்தோம்?” என்றொரு முக்கியமான கேள்வியை கேட்டார். 

ஜனாதிபதி விக்ரமசிங்க 1989ஆம் ஆண்டு கைத்தொழில் அமைச்சராக இருந்தபோது இதே கேள்வியை கேட்டார். 

அதற்கான பதில் ஓர் ஆதாரமாக இருந்தபோதிலும், இப்போது கூட அந்நிலையை சரிசெய்வதற்கு அதிகமாக எதுவும் செய்யப்படவில்லை. பாடங்கள் எதுவும் கற்கப்படவில்லை. அதே தவறுகள் மீண்டும் மீண்டும் செய்யப்படுகின்றன. 

ஜனாதிபதி விக்ரமசிங்க 30 வருடங்களுக்கு மேலாக இப்பிரச்சினையை கற்கை செய்தும், அதற்கான காரணங்களை அவர் சரியாக கண்டறியவில்லை என்பதே எளிய உண்மை. 

இது தொடர்பாக நாம் அடைந்துள்ள குழப்பங்களில் பங்களிப்பு செலுத்தி வரும், அரசாங்கத்தால் அதிகளவில் புறக்கணிக்கப்பட்ட நான்கு செயன்முறைகளாக அரச தலையீடு, கைத்தொழில்மயமாக்கல், அபிவிருத்தி வங்கியியல் மற்றும் தேசிய திட்டமிடல் என்பன காணப்படுகின்றன.  

நாட்டின் முக்கிய பிரச்சினை எதிர்மறையான சென்மதி நிலுவையாக இருந்தால், வரவு - செலவுத் திட்டம் ஒரு சாத்தியமான தீர்வினை உருவாக்க வேண்டும். 

ஏற்றுமதி சார்ந்த போட்டிப் பொருளாதாரம் மீது வரவு - செலவுத் திட்டத்தின் கவனம் செலுத்தப்பட்ட போதிலும், இதை எவ்வாறு அடைவது என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை.  

போட்டித்தன்மை எனும் வார்த்தைக்கு ஒரு கவர்ச்சி உள்ளதோடு, இங்கு இது கைத்தொழில் துறையில் அரசின் தலையீட்டை அகற்றும் சூழலில் பயன்படுத்தப்படுகிறது.

என்னதான் ஜனாதிபதி புதிய சிந்தனைக்கு அழைப்பு விடுத்தாலும், கடந்த கால சித்தாந்த சார்பு, அதன் முகத்தை காட்டுகிறது. 

நவீன தாராளவாத சிந்தனையாளர்கள் அரசின் தலையீட்டை எதிர்க்கிறார்கள். சந்தைகள் தோல்வியடைகின்றன என்பது திரும்ப திரும்ப நிரூபிக்கப்பட்டாலும், அவர்கள் சந்தைகளின் மாயத்தை நம்புகிறார்கள்.

அரசின் தலையீடு தொடர்பாக நமது சொந்த அனுபவத்தை முன்னிலைப்படுத்துவது சுவாரஸ்யமாக இருக்கும். 

கடந்த நான்கு தசாப்தங்களாக உள்ளூர் தொழிற்துறையின் ஒரே வெற்றிகரமான உதாரணம் ஆடைத்துறையாகும். அதன் அபிவிருத்தியானது, சர்வதேச தரப்பில் Multi Fiber ஒப்பந்தம் மற்றும் உள்ளூர் தரப்பில் 200 ஆடை தொழிற்சாலை நிகழ்ச்சித் திட்டம் ஆகிய இரண்டு தரப்பினரின் தலையீட்டின் மூலம் உருவானது. 

உள்ளூர் இறக்குமதிக்கு மாற்றீடான கைத்தொழில்கள் போட்டித்தன்மையை அடைய உதவாமல் தாராளமயமாக்கியமை அப்போது செய்யப்பட்ட ஒரு முக்கிய தவறாகும். 

ஜனாதிபதி அவதானித்தபடி, ஏழு ஆண்டுகளாக (1970 - 1977) மூலதன பற்றாக்குறை காணப்பட்ட கைத்தொழில்களை வெளிநாட்டு இறக்குமதிகளுடன் போட்டியிடுமாறு ஒரே இரவில் கேட்கப்பட்டன.

உண்மையில், தலையீடு, அது பயன்பட வேண்டிய இடத்தில் பயன்படுத்தப்படுவது, பொருளாதாரத்துக்கு நன்மை பயக்கும் என்பதை ஒருவர் அறிந்திருக்க வேண்டும். 

உயர் செயற்றிறன் கொண்ட ஆசிய பொருளாதாரங்களிலிருந்து (HPAEs) பல உதாரணங்களை பெறலாம். 

பெரும்பாலானவர்கள் தலையீடு என்பது அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை (SOE) நிறுவுவதாய் தவறாக புரிந்துகொள்கிறார்கள். இது தலையீட்டுக்கான காரணமல்ல. 

தலையீடு என்பது சந்தை சக்திகள் இல்லாத போதெல்லாம் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கு தேவையான சூழலை உருவாக்குவதை உள்ளடக்குகிறது. 

தனியார் துறை பங்கு வகிக்கவில்லை என்றால் அல்லது அவை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தால் மட்டுமே SOEகள் அமைக்கப்பட வேண்டும்.

மேலும் கவலையளிக்கும் வகையில், தற்போதைய வரவு - செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு கைத்தொழிற்துறை அபிவிருத்தியில் கவனம் செலுத்தவில்லை. 

பாதுகாப்பு செலவீனங்கள் உயர்த்தப்பட்ட நிலையில் கல்விச் செலவீன குறைப்புக்களை சந்தித்துள்ளது. 

புதிய கைத்தொழிற்துறை வலயங்கள் முன்மொழியப்பட்டுள்ள அதேவேளை ஏற்கனவே அமைக்கப்பட்ட சில நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இது மற்றொரு பிரச்சினையுடன் தொடர்புடையது.

உள்ளூர் கடன்களுக்கான வட்டி செலுத்துகை, பொது முதலீடுகளை விட இரு மடங்கு அதிகமாகும். ஆயினும், வரவு - செலவுத் திட்டம் பொது நிதிக்கான அணுகுமுறையில் மிகவும் விரும்பத்தக்கதாக உள்ளது.

அந்த வகையில், வரவு - செலவுத் திட்டத்தில் உள்ள மற்றொரு முக்கிய குறைபாடு என்னவெனில், அது அபிவிருத்திக்கான நிதியை சந்தை சக்திகளுக்கு விட்டுவிடுகிறது என்பதேயாகும். 

கனடா போன்ற நாடுகள் இத்தகைய உத்திகளை பயன்படுத்திய போதிலும், அபிவிருத்தி செயன்முறைக்கான அபிவிருத்தி வங்கியியலின் பொருத்தப்பாடு ஓரங்கட்டப்பட்டு, புறக்கணிக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை.

அபிவிருத்தி வங்கியியலுடனான திறந்த சந்தைகளில் வாதிடப்படுகின்ற பிரச்சினை, தலையீடாக கருதப்படுவதுடன் நேரடியாக 'வொஷிங்டன் தீர்மானத்துக்கு' முரணான சலுகை வட்டி விகிதங்களாகும். 

இருப்பினும், ஒருவர் சித்தாந்தத்தை கைவிட்டு எளிய பொது அறிவைப் பின்பற்றுவது கட்டாயமானதாகும்.

இதை விடவும் கவலையளிக்கும் விடயம்,  அபிவிருத்தித் திட்டத்தின் பற்றாக்குறையாகும். 

எல்லாவற்றையும் சந்தைக்கு விட்டுவிட வேண்டும் என்று கருதுகின்ற நவீன தாராளவாதிகளுக்கு திட்டமிடல் என்பது வெறுப்பூட்டும் செயலாக இருந்ததையும், இருக்கின்றதையும் நாம் அறிவோம். 

சந்தைத் தோல்வியின் விளைவுகளை நாம் நேரடியாக கண்டுள்ளோம். 

ஓர் அபிவிருத்தித் திட்டம் இருக்கும்போது, பொருளாதார இலக்குகள் எங்கு எட்டப்படுகின்றன, எங்கு அடையவில்லை என்பதை கவனிக்க முடிவதுடன், இது தேவைப்படும் இடங்களில் சரிப்படுத்தும் நடவடிக்கைகளை அமுல்படுத்துவதை சாத்தியமாக்குகிறது. 

சிங்கப்பூர் உட்பட அனைத்து உயர் செயற்றிறன் கொண்ட ஆசிய பொருளாதாரங்களும் (HPAEs), அதன் அபிவிருத்தியின் ஆரம்ப கட்டத்தில் ஒரு திட்டத்தின் அடிப்படையில் விருத்தி செய்யப்பட்டது.

ஓர் அபிவிருத்தித் திட்டத்தினால் ஒரு தேசிய திட்டத்தின் அடிப்படையை உருவாக்க முடியும். யார் ஆட்சிக்கு வந்தாலும், அதில் முன்மொழியப்பட்ட மற்றும் பரிந்துரைக்கப்பட்ட கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்ற வகையில் அதை உருவாக்க முடியும். அத்தகைய திட்டம் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும். 

ஆகவே, அத்திட்டம் உள்ளூர் தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோரை மட்டுமன்றி, வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் உள்ளடக்கும். 

அந்த திட்டம், நாடு எங்கு செல்கிறது என்பதற்கான முழுமையான பார்வையை வழங்குவதோடு, தற்போது நாம் காணும் குறிப்பிட்ட மாற்றங்களின் கலாசாரத்துக்கு மாறாக, அனைவருக்கும் விடயங்களை இலகுவாக்குகின்றது.

எப்படியிருந்தாலும், ஒன்று தெளிவாக உள்ளது.

அபிவிருத்திக்கு நிதியளிப்பதற்கு திருப்திகரமான முறைமை இல்லையென்றால், தேவையான  அளவில் புதிய கைத்தொழில் துறை எதுவும் இருக்காது என்பதுடன், தற்போதுள்ள கைத்தொழில் துறைகளும் தற்போதுள்ள நிலைக்கப்பால் விரிவடையாமல் இருப்பதற்கு அல்லது வீழ்ச்சியடைவதற்கு வாய்ப்புள்ளது.

வரவு - செலவுத் திட்டங்கள் அனுமானங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை என்பதையும், அதற்கு இந்த வரவு - செலவுத் திட்டமும் வேறுபட்டதல்ல என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எவ்வாறாயினும், இப்போது நாட்டில் உள்ள சூழ்நிலையின் காரணமாக அந்த அனுமானங்கள் உண்மைக்கு நெருக்கமாக இருக்க வேண்டும். அடுத்த நான்கு ஆண்டுகளில் IMF நிதியுதவியை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் IMF ஒப்பந்தத்துக்குப் பிறகு மேலதிக இருதரப்பு நிதியுதவிகள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் வரவு - செலவுத் திட்ட விபரங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ள நம்பிக்கையுடன் வெளிப்படும். 

ஸ்ரீலங்கா டெலிகொம் போன்ற சொத்துக்களின் விற்பனையானது வெளிநாட்டு இருப்புக்களை மேம்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது நடக்கலாம் அல்லது நடக்காமல் போகலாம். நடக்காமல் போனால், எதிர்பார்க்கும் வருமானத்தில் பற்றாக்குறை ஏற்படும்.

இப்போது நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய மிகப்பெரிய காரணி நம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

கடனை திருப்பிச் செலுத்த ஆரம்பித்தவுடன் என்ன நடக்கும்?

கடனை சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க முடியும் என்றாலும், இந்த பொறுப்புகளை சந்திக்க நாம் தயாராக வேண்டிய சலுகைக் காலம் அதுவாகும். 

மிகத் தொலைவில் இல்லாத எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்ளும் சூழ்நிலையை எதிர்கொள்வதற்கு தகுந்த முயற்சியை மேற்கொள்கிறோமா?

பல ஆண்டுகளாக இலங்கை மத்திய வங்கி தனது வகிபாகத்தை சரியாக ஆற்றவில்லை என்பதுடன் அடுத்தடுத்த ஆட்சிகள் அழிவுகரமான கொள்கைகள் மற்றும் நடைமுறைகளில் ஈடுபட்டுள்ள நிலையில் தான் ஒரு பார்வையாளனாக இருப்பதில் திருப்தி அடைந்துள்ளமை வருத்தமளிக்கிறது. 

உண்மையில், சில சந்தர்ப்பங்களில் மத்திய வங்கி அத்தகைய கொள்கைகளை பின்பற்ற ஊக்குவித்துள்ளது.

ஒப்பீட்டளவிலான வரவு - செலவுத் திட்டத்துடன் நாம் புரிந்துகொள்ள வேண்டிய வெளிப்படையான உண்மை என்னவென்றால், உலகில் எந்த நாடும் திறந்த சந்தைகளால் மட்டும் அபிவிருத்தி அடையவில்லை. இன்றைய அபிவிருத்தியடைந்த பொருளாதாரங்கள் கூட தங்கள் அபிவிருத்தியின் ஆரம்ப கட்டங்களில் பெரும் தலையீட்டைக் கொண்டிருந்தன. 

பேராசிரியர் ஹா-ஜூன் சாங் தனது 'Kicking Away the Ladder' என்ற புத்தகத்தில் வாதிடுவது போல, இந்த நாடுகள் தங்களை மற்றவர்கள் பின்பற்றுவதை விரும்புவதில்லை.

HPAEகளை அவர்களின் அபிவிருத்தியில் வழிநடத்திய தத்துவவியல் பொது அறிவைத் தவிர வேறெந்த சித்தாந்தமும் அல்ல. 

இலங்கை அந்த பொதுவான அறிவை அதிகமாக கொண்டிருந்தால், மற்றும் குறைவான பொதுவான அறிவை பயன்படுத்தினால், நன்றாக இருந்திருக்கும். 

இந்த நோக்கத்துக்காக 1950இல் இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்க மத்திய வங்கியை திறந்துவைத்து ஆற்றிய உரையில் அவதானித்த விடயமான நாடு முன்னேற வேண்டுமானால், அது அபிவிருத்திக்கான மற்றைய சாத்தியக்கூறுகளை பார்க்க வேண்டும் என்பதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீள்பார்வை செய்ய வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48