கிளிநொச்சியில் 29 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

Published By: Nanthini

26 Nov, 2022 | 11:01 AM
image

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலை பகுதியில் 29 கிலோ 150 கிராம் கஞ்சாவுடன் இன்றைய தினம் சனிக்கிழமை (நவ 26) இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கி கப் ரக வாகனத்தில் கஞ்சா ஏற்றி வருவதாக பளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, முகமாலை பகுதியில் வைத்து 29 கிலோ 150 கிராம் கஞ்சாவுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த அளவிலான கஞ்சா சூட்சுமமான முறையில் கப் ரக வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குலரத்ன தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையின்போதே கஞ்சா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபர்கள் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06