கொழும்பு – நீர்கொழும்புக்கிடையிலான ரயில் பாதையை மறித்து கல்கந்த பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனியார் போக்குவரத்து துறையினர் நேற்று வெள்ளிக்கிழமை நாடுமுழுவதும் சேவை பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் நீர்கொழும்பு - கல்கந்தை பகுதியில் சிலர் ரயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரயில் பாதையை விட்டு அகன்றுச் செல்லுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போதும் குறித்த நபர்கள் தொடர்ந்து ரயில் பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து நேற்று மாலை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதோடு 18 பேரை கைது செய்துள்ளனர்.
கைது செய்த நபர்களை நீர்கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM