பாகற்காய் சாம்பார்

Published By: Ponmalar

24 Nov, 2022 | 09:05 PM
image

தேவையான பொருட்கள்: 

பாகற்காய் - கால் கிலோ 

துவரம்பருப்பு - 1 கப் 

புளி - நெல்லிக்காய் அளவு 

வெங்காயம் - 1 

தக்காளி - 1 

தேங்காய் துருவல் - 1 கைப்பிடி 

கொத்தமல்லி - 3 தேக்கரண்டி 

மிளகாய் வற்றல் - 6 

துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி 

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி 

கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி 

வெந்தயம் - அரை தேக்கரண்டி 

சீரகம் - அரை தேக்கரண்டி 

உப்பு - தேவையான அளவு 

கொத்தமல்லி - சிறிதளவு 

தாளிக்க : 

எண்ணெய் - 1 தேக்கரண்டி 

கடுகு - கால் தேக்கரண்டி 

பெருங்காய தூள் - கால் தேக்கரண்டி 

மிளகாய் வற்றல் - 2 

கறிவேப்பிலை – தேவைக்கேற்ப 

செய்முறை : 

* புளியை வெந்நீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டவும். 

* பாகற்காயை விதை நீக்கி வட்ட வடிவில் நறுக்கி தயிரில் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். இது பாகற்காயின் கசப்பை நீக்க உதவும். பிறகு நன்றாக நீரில் அலசி, வேகவைத்து எடுக்கவும். 

* கொத்தமல்லி, மிளகாய் வற்றல், பருப்பு வகைகள், சீரகம், வெந்தயம் எல்லாவற்றையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும். 

* மிக்சியில் தேங்காய் துருவலை போட்டு நைசாக அரைத்து கொள்ளவும். 

* பெரிய வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

* குக்கரில் நறுக்கி வெங்காயம், தக்காளி, துவரம் பருப்பை சேர்த்து வேகவைத்து கொள்ளவும். பருப்பு வெந்ததும் அதை மசித்து கொள்ளவும். 

* கரைத்த புளியை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். 

* அடுத்து அதில் பாகற்காயை சேர்த்து பொடித்த மிளகாய், பருப்பு வகைகளை சேர்த்து கொதிக்கவிடவும். 

* அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுது, வேகவைத்து மசித்த பருப்பை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். 

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்துக் சாம்பாரில் கொட்டி 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும். 

* இறக்கும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.. 

* சூப்பரான பாகற்காய் சாம்பார் ரெடி. 

* தக்காளி, தேங்காய் துருவல் சேர்ப்பதால் பாகற்காய் சாம்பார் கசப்பில்லாமல் சுவையாக இருக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right