13 ஆம் திருத்தத்திற்கு அமைய அதிகாரப் பகிர்வுக்கு இணக்கம் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

Published By: Digital Desk 3

24 Nov, 2022 | 03:57 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

13 ஆவது திருத்தத்தில் உள்ளவாறு அதிகார பகிர்வுக்கு நாங்கள் இணங்குகின்றோம். இந்த நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.

அரசியல் வரப்பிரசாதங்களுக்காக எமது கொள்கைகளை காட்டிக்கொடுக்கவும் மாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொழில்நுட்ப அமைச்சு விடயதானங்களுக்கான  நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

13 ஆவது திருத்தம் தொடர்பில் ஒவ்வொருவரிடமும் ஜனாதிபதி கேட்டார். இதுதொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு தெளிவானது.  ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் அதற்கு இணங்குகிறது.

நாங்கள் ஒருபோதும் 13 பிளஸ் 13 மைனஸ் என்று கூறியது கிடையாது. அதேபோன்று 13ஐ கிழித்தெறியவும் நடவடிக்கை எடுத்ததில்லை.

ஆனால் மொட்டுக் கட்சியின் குழுவினரே வெளிநாட்டுக்கு சென்றார் 13 பிளஸ் நாட்டுக்குள் 13 மைனஸ் என்றும் கதைப்பவர்கள். ஆனால் நாங்கள் பலமான நிலைப்பாட்டில் இருக்கின்றோம். 

அதாவது 13 ஆவது திருத்தத்தில் உள்ளவாறு அதிகார பகிர்வுக்கு நாங்கள் இணக்கம். இந்த நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அரசியல் வரப்பிரசாதங்களுக்காக எமது கொள்கைகளை நாங்கள் காட்டிக்கொடுக்கவும் மாட்டோம்.

வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் விசேட சர்வகட்சி கூட்டத்தை நடத்தி சுதந்திர தினத்திற்கு முன்னர் வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இறுதித் தீர்மானத்திற்கு வருவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஒரே நாட்டுக்குள், பிளவுப் படாத நாட்டுக்குள், ஒருமைப்பாட்டை பாதுகாத்து, இறைமையை பாதுகாத்து செய்யும் அதிகார பகிர்வுக்கு நாங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்.

ஜனாதிபதி கூறியவாறு சுதந்திர தினத்திற்கு முன்னர் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் பிரச்சினையை தீர்ப்போம்.

இதற்கு தேவையான ஒத்துழைப்பு மற்றும் தலைமைத்துவத்தை முன்னணியில் இருந்து வழங்குவதற்கு நாங்கள் தயார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரச உத்தியோகத்தர்களுக்கு ஏப்ரல் முதல் சம்பள...

2025-03-26 15:22:44
news-image

புத்தாண்டை முன்னிட்டு சலுகை விலையில் உணவுப்பொதி...

2025-03-26 15:12:39
news-image

ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு...

2025-03-26 15:37:56
news-image

கடும் பாதுகாப்புக்கு மத்தியில் “ஹரக் கட்டா”...

2025-03-26 15:20:15
news-image

வெளிநாட்டு அரசாங்கங்களால் துன்புறுத்தப்படும் முன்னாள் ஆயுதப்படையினரை...

2025-03-26 15:16:57
news-image

யோஷித ராஜபக்ஷ : இரவு நேர...

2025-03-26 15:02:06
news-image

ஏப்ரலில் ஸ்டாரிலிங்க் இணையச் சேவை அறிமுகம் 

2025-03-26 14:55:42
news-image

குவைத் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த...

2025-03-26 15:01:21
news-image

மோட்டார் சைக்கிள் - பாரஊர்தி மோதி...

2025-03-26 14:32:17
news-image

ஊடக மாற்றங்களுக்கு அரசாங்கம் பொறுப்பாளியாக இருக்க...

2025-03-26 14:08:21
news-image

வெலிக்கடையில் வெளிநாட்டு தயாரிப்பு கைக்குண்டு கைப்பற்றல்

2025-03-26 13:27:41
news-image

சிவஸ்ரீ தாணு மஹாதேவ குருக்களின் மறைவுக்கு...

2025-03-26 13:36:17