பீபா 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் முன்னாள் சம்பியனான ஜேர்மனை ஜப்பான் 2:1 கேர்லகளால் வென்றது.
கத்தார் தலைநகர் தோஹாவின் கலீபா அரங்கில் இப்போட்டி நடைபெற்றது.
போட்டியின் 33 ஆவது நிமிடத்தில் ஜேர்மனிய வீரர் இல்காய் குண்டகான் முதலாவது கோலை புகுத்தினார்.
இடைவேளையின் போது ஜேர்மனி 1:0 விகிதத்தில் முன்னிலையில் இருந்தது.
எனினும், 76 ஆவது நிமிடத்தில் ஜப்பானிய வீரர் ரிட்ஸு டோவன் கோல் அடித்து, கோல் விகிதத்தை சமப்படுத்தினார்.
அதன்பின் 83 ஆவது நிமிடத்தில் டகுமா அசானோ, ஜப்பானின் இரண்டாவது கோலை புகுத்தி ஜேர்மனிக்கு அதிர்ச்சியளித்தார்.
உலகக் கிண்ண போட்டிகளில் பதிவான மற்றொரு அதிர்ச்சிகரமான பெறுபேறு இது.
சர்வதேச கால்பந்தாட்டத் தரவரிசையில் ஜேர்மனி 11 ஆவது இடத்திலும் ஜப்பான் 24 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. (-சேது)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM