கந்தளாயில் 85 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த நபர் ஒருவருக்கு எட்டு வருட சிறைத்தண்டனையும், எட்டு இலட்சம் ரூபா தண்டப்பணமும் விதித்து கந்தளாய் நீதிமன்ற நீதிவான் புதன்கிழமை (23) உத்தரவிட்டார்.
கந்தளாய், லைட்வீதி,பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் நாட்டில் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடியான காலகட்டத்தில் டீசல் மற்றும் பெற்றோல் போன்ற எரிபொருட்களை பெற்றுத்தருவதாக கூறி பல நபர்களிடம் 85 இலட்சம் ரூபா பணத்தினை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பணம் செலுத்தியவர்களினால் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி பொலிஸாரினால் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், குறித்த நபருக்கெதிராக கந்தளாய் நீதிமன்றில் நடைபெற்று வந்த வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நீதிவான் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM