உக்ரேனின் தென்பகுதியில் உள்ள வைத்தியசாலை மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது தாய் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
சபோரிஜியா பகுதியில் உள்ள வில்னியான்ஸ் என்ற நகரின் மகப்பேற்று வைத்தியசாலை மீது ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டது என உக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாய் குழந்தையை பிரசவித்து ஒரு சில நிமிடங்களில் இந்த தாக்குதல் இடம்பெற்றது வைத்தியர் ஒருவரும் கட்டிட இடிபாடுகளிற்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளார் என உக்ரேன் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட வைத்தியசாலை உள்ள பகுதியை நோக்கி ரஷ்ய படையினர் பாரிய ரொக்கட் தாக்குதலை மேற்கொண்டனர் என உக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா ஒன்பது மாத போரினால் சாதிக்க முடியாததை பயங்கரவாதம் கொலை மூலம் சாதிக்க முயல்கின்றது அது ஒருபோதும் சாத்தியமாகாது என உக்ரேன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM