ஆயுளை நீட்டிக்கும் எமகண்டம்..!

Published By: Ponmalar

23 Nov, 2022 | 01:04 PM
image

வேகமாக மாற்றம் பெற்று வரும் வாழ்வியல் நடைமுறையின் காரணமாக, 80 , 90 வயதுகளில் இயல்பாக நிகழ வேண்டிய மரணம் என்பது மறைந்து, 40, 50 வயதுகளிலேயே மரணம் என்பது ஏற்பட தொடங்கி விட்டது. இதற்கு பிரபஞ்சத்தையோ.. இறைவனையோ.. எமதர்மராஜனையோ.. குற்றம் சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. ஏனெனில் தூய ஜீவாத்மா தங்கியிருக்கும் இந்த உடலை நாம் ஆரோக்கியமாக பேணுவதில்லை. தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறோம். ஆசைக்கு இணங்கி அதிலும் குறிப்பாக நாவின் சுவைக்கு அடிமையாகி, பசி இல்லை என்றாலும் அகால வேளையிலும் ருசியான உணவினை சாப்பிட்டு ஆரோக்கியத்தை துறந்து உடலை வளர்க்கிறோம். இதன் காரணமாக உடலுடன் நோயும் வளர்ந்து அவர்களை உயிர்த்துறக்க செய்கிறது.

மேலும் எம்முடைய இல்லங்களில் நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டு துன்பப்படுபவர்கள் இருக்கலாம். அல்லது நாட்பட்ட நோயினால் தாக்கப்பட்டு, சிகிச்சை பெறுபவர்களும் இருக்கலாம். இவர்களுக்கு வெளியில் சொல்ல முடியாத வேதனைகள் ஏராளமாக இருக்கும். இவை அனைத்தும் நோய்களால் ஏற்படும் துன்பங்கள். இதனை குறைப்பதற்கு வழி இல்லையா..? என சிலரும், இதிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு ஆன்மீகம் ஏதேனும் உபாயங்களை வழங்கி இருக்கிறதா..? என்ற தேடலும் சிலரிடம் இருக்கும். ஆனால் இதற்கும் ஒரு வழிமுறை இருக்கிறது.

24 மணித்தியாலங்களில் நாளாந்தம் ராகு காலம் என ஒன்றரை மணித்தியாலமும், குளிகை காலம் என ஒன்றரை மணித்தியாலமும், நல்ல நேரம் என இரண்டொரு மணி நேரமும் இருப்பதைப் போல்.., எமகண்டம் என ஒரு ஒன்றரை மணித்தியாலமும் இருக்கிறது. இந்த எமகண்ட நேரத்தை நாம் சரியாக துல்லியமாக பயன்படுத்திக் கொண்டால், வியாதிகளால் துன்புறும் நிலையிலிருந்து விடுபடலாம். ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக வாழலாம். ஏனெனில் எமகண்ட கால அவகாசம் என்பது, உயிரை பறிக்கும் எமதர்மராஜா கடவுளின் நேரம் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே எமகண்ட நேரத்தை பயன்படுத்தி ஆயுள் முழுவதும் நோயற்ற வாழ்க்கையை வாழலாம்.

உங்களுடைய பூஜையறையில் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும், எமகண்ட நேரத்தில், அகல் விளக்கு ஒன்றில் தூய பசு நெய்யை ஊற்றி, அதில் ஒரு பஞ்சு திரியை இட்டு, விளக்கேற்றி, எமதர்மராஜனின் ஏதேனும் ஒற்றை வாக்கிய மந்திரத்தை மனமுருக பிரார்த்தித்துக் கொண்டால்.., அந்த எமதர்மராஜனின் கடைக்கண் பார்வை பட்டு, உங்களுக்கு நோயால் துன்புறும் நிலை அகலும். உங்களுடைய மரணம் உங்களுடைய விருப்பப்படி நிகழும். இந்த விளக்கினை சனிக்கிழமை எமகண்ட நேரமான மதியம் ஒரு மணி 30 நிமிடம் முதல் மூன்று மணி வரை மட்டுமே ஏற்ற வேண்டும். அதன் பிறகு அதனை நினைவு வைத்து அணைத்து விட வேண்டும். இந்த ஒன்றரை மணித்தியாலத்தில் நீங்கள் விளக்கேற்றி எமதர்ம ராஜனை மனம் உருக வேண்டுவதன் மூலம் உங்களுக்கான ஆயுளும் அதிகரிக்கும். நோயால் நீங்கள் துன்புறும் நிலையிலிருந்து முழுமையான நிவாரணமும் கிடைக்கும்.

சிலர் இதனை நாளாந்தம் ஏற்றி வழிபடலாமா..? எனக் கேட்பர். ஏனெனில் அவர்களது இல்லங்களில் நோயால் துன்புறுபவர்கள் இருக்கக்கூடும். நாளாந்த எமகண்ட நேரத்தில் இத்தகைய பிரார்த்தனையில் ஈடுபடலாம். ஆனால் எமகண்டம் நேரம் தொடங்கும் நேரத்தில் தொடங்கி, முடியும் நேரத்தில் விளக்கை அணைத்து விட வேண்டும். மேலும் இதற்கென பிரத்யேகமான அகல் விளக்கை பயன்படுத்துவது கூடுதல் சிறப்பு. நோயால் வாடுபவர்கள் மட்டுமல்ல நோயற்ற வாழ்க்கையை விரும்புபவர்களும் சனிக்கிழமை தோறும் இந்த எமகண்ட நேரத்தில் நெய் விளக்கேற்றி, எம தீப பிரார்த்தனையில் ஈடுபட்டால் பலன் உண்டு.

சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெற்றியை உண்டாக்கும் மந்திர வழிபாடு

2025-01-23 16:12:37
news-image

பாவங்கள் நீக்குவதற்கான எளிய வழிமுறை..!?

2025-01-22 17:24:15
news-image

உங்களுக்கு கூர்ம யோகம் இருக்கிறதா..!?

2025-01-21 15:49:42
news-image

அபிஷேகம் செய்வதன் மூலம் பலன் பெறுவது...

2025-01-20 17:52:05
news-image

கடன் சுமை குறைவதற்கான எளிய பரிகாரம்...!?

2025-01-18 22:11:20
news-image

வருவாயை அதிகரித்துக் கொள்வதற்கான சூட்சுமமான வழிமுறை..!?

2025-01-17 17:01:03
news-image

தொழிலில் ஏற்படும் தடையை நீக்குவதற்கான எளிய...

2025-01-16 20:12:57
news-image

செல்லப் பிராணியை எப்போது வாங்கலாம்?

2025-01-15 17:39:12
news-image

ஒவ்வொருவரும் நாளாந்தம் பின்பற்ற வேண்டிய ஆன்மீக...

2025-01-13 15:56:39
news-image

குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கு எளிமையான வழிமுறை..!?

2025-01-09 15:26:03
news-image

எதிர்மறை ஆற்றலை அழித்து செல்வத்தை குவிக்கும்...

2025-01-08 19:26:11
news-image

கல்வியில் தேர்ச்சி பெறுவதற்கான எளிய குறிப்புகள்..!?

2025-01-07 16:03:17