பெண்களைக் கவரும் மருதாணி...

Published By: Devika

23 Nov, 2022 | 10:35 AM
image

ண்டிகை காலங்களில் வீடுகளில் பெண்கள் கையில் மருதாணியிட்டு, அது அழிந்து விடாமல் இரவு முழுவதும் பாதுகாத்து காலையில் கையை கழுவிய பின் மருதாணி சிவப்பு நிறம் எந்த அளவு பிரகாசமாக உள்ளது என்பதை பார்த்து மகிழ்வார்கள். 

திருமணங்களில் மணப்பெண்­களுக்கு பாரம்பரிய முறையில் பதி­னாறு வகையான அலங்காரங்­களை செய்கிறார்கள். அதில் முக்கியமானது மருதாணி அலங்காரம். 

பெண்கள் மருதாணி அலங்காரம் செய்துகொள்ள எப்போதுமே விரும்பு­­­வார்கள். ஏனென்றால் அது அவர்­களுக்கு அழகோடு, ஆரோக்­கியத்தை­யும் சேர்த்து தருகிறது.

மரு­தாணி உடலில் பித்தத் தன்மையை கட்டுப்­படுத்தி, குளிர்ச்சியை தருகிறது. பாரம்பரிய மருதாணி உள்­ளங்­கைகளி­லும், கால்களில் மட்டுமே வைக்கப்பட்டது. இப்போது தோள் பட்டையிலிருந்து விரல்கள் வரை அலங்கரிக்கப்படுகிறது. கைகளை முழுவதுமாக மெஹந்தியால் அலங்­கரிக்க விருப்பம் இல்லாதவர்கள் குறை­வான டிசைனுடன் கூடிய ஸ்டைலை தெரிவு செய்துகொள்ளலாம். 

மலர்கள் போன்ற டிசைன்களுடன் மெஹந்தி வரைவது உங்கள் கைகளை மேலும் அழகுபடுத்திக் காட்டும். இதற்கு ஏற்றவாறு ஆடை அணிந்தால் நாள் முழுவதும் மற்றவர்களின் பாராட்டு மழை­யில் நீங்கள் நனைவதை தவிர்க்க இயலாது. 

எலுமிச்சை சாற்றில் சர்க்கரை சேர்த்து கலந்து, அக்கலவையை கைகளில் வைத்த மெஹந்தி காய்ந்த பின்­னர் பஞ்சின் உதவியால் தடவி 15 நிமி­டங்கள் வைத்திருந்தால், மெஹந்தி நல்ல நிறத்தில் கைகளில் பிடிக்கும். 

மெஹந்தி வைத்து நன்கு உலர்ந்த பின்னர், அதனை நீரில் கழுவாமல், உலர்ந்ததை சுரண்டி எடுத்துவிட்டு, கைகளில் கடுகு எண்ணெய் அல்லது விக்ஸ் தடவினால், கையில் உள்ள மெஹந்தியின் நிறம் அதிகரிக்கும். 

மெஹந்தி வைத்தால் குறைந்தது 4-5 மணிநேரம் வைத்திருப்பதோடு, 12 மணிநேரத்திற்கு கைகளை நீரில் கழுவக்கூடாது. அப்படி கழுவினால், கைகளில் உள்ள மெஹந்தியின் நிறம் மங்க ஆரம்பிக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்