மக்கள் வங்கி பிராந்திய கடன் பிரிவுகளுக்கான பாராட்டு விழாவை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
மக்கள் வங்கி, 2020/2021 பிராந்திய கடன் பிரிவுகளுக்கான பாராட்டு விழாவை சமீபத்தில் மிக விமரிசையாக நடத்தியுள்ளது.
வத்தளை பெகசஸ் ரீஃப் ஹோட்டலில் இடம்பெற்ற இந்த வைபவம், மக்கள் வங்கியின் நிறுவன வங்கிச்சேவைத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அபிவிருத்தி மற்றும் நுண்கடன், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகம் மற்றும் வணிகக் கடன் பிரிவுகளின் கீழ் பிராந்திய கடன் பிரிவுகளின் சிறந்த செயல்திறனை இந்நிகழ்வு அங்கீகரித்துள்ளது.
இந்நிகழ்வில் மக்கள் வங்கியின் பணிப்பாளர் சபைத் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ் பிரதம நிறைவேற்று அதிகாரிஃபொது முகாமையாளர், ரஞ்சித் கொடிதுவக்கு சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர் (கொடுப்பனவு, டிஜிட்டல், செயல்முறை முகாமைத்துவம் மற்றும் தர நிர்ணய உத்தரவாதம்), கே.பி. ராஜபக்ஷ் சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர் (பரிவர்த்தனை வங்கிச்சேவை மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகள்), ரொஹான் பத்திரகே; பிரதிப் பொது முகாமையாளர் (நிறுவன வங்கிச்சேவை), கிறிஷானி நாரங்கொட் மக்கள் வங்கியின் நிர்வாக முகாமைத்துவ உறுப்பினர்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான பணியாளர்கள் கலந்து சிறப்பித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM