''நான் எந்த திரைப்படங்களையும் பார்த்து கொப்பி அடிப்பதில்லை. மண்ணின் மைந்தர்களை பற்றியும், நான் சந்தித்த மனிதர்களிடமிருந்தும் கதைகளை எடுத்து படமெடுக்கிறேன்'' என 'பட்டத்து அரசன்' படத்தின் இயக்குநரான ஏ. சற்குணம் தெரிவித்திருக்கிறார்.
ராஜ்கிரண் - அதர்வா கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் திரைப்படம் 'பட்டத்து அரசன்'. இந்த இரு நட்சத்திரங்களுடன் நடிகர்கள் ஜெயப்பிரகாஷ், ஆர். கே. சுரேஷ், சிங்கம்புலி, துரை சுதாகர், பால சரவணன், ராஜ் ஐயப்பன், நடிகைகள் ராதிகா சரத்குமார், ஆஷிகா ரகுநாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
லோகநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். 'களவாணி", 'வாகை சூடவா', 'நையாண்டி', 'சண்டி வீரன்', 'களவாணி 2' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஏ. சற்குணம் 'பட்டத்து அரசன்' படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார்.
தமிழர்களின் கலாச்சாரத்தையும், வீர விளையாட்டான கபடி விளையாட்டை மையப்படுத்தியும் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இம்மாதம் 25 ஆம் திகதியன்று உலகம் முழுதும் பட மாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' ஒரு குடும்பத்திற்கும், ஒரு ஊருக்கும் இடையே நடைபெறும் கபடி போட்டி தான் 'பட்டத்து அரசன்' படத்தின் கதை. தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி, இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.
தார பங்கு என்று தமிழர்களிடத்தில் குறிப்பாக தஞ்சை தரணியில் சொத்து பிரிவினையின் போது ஒரு விவகாரம் முன் வைக்கப்படும். அதனை தழுவியும் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. முதன் முதலாக ராஜ்கிரண் மூன்றுவித தோற்றத்தில் இப்படத்தில் நடித்திருக்கிறார்.
அவருடைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு வியக்கத்தக்கது. அதர்வாவும், புதுமுகம் ஆஷிகா ரங்கநாத்தின் இளமை குறும்புடன் கூடிய காதல், ரசிகர்களை கவரும். குடும்பத்துடன் அனைவரும் காண வேண்டிய படைப்பாக 'பட்டத்து அரசன்' தயாராகி இருக்கிறது'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM