(எம்.வை.எம்.சியாம்)
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத மது பானங்களுடன் நால்வர் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு, குரான பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் சட்டவிரோத மதுபானங்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் 34, 38, 51 மற்றும் 63 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் கட்டுநாயக்க மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட 45 லீட்டர் மதுபானங்களும் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM