நாகை, காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள், நெடுந்தீவு கடலருகே கடந்த 17ஆம் திகதி இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டிய மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் விசைப்படகுடன் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனையடுத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யவேண்டுமெனவும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இந்த நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த 14 மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மீன்பிடி படகை அரசுடமையாக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
விடுதலை செய்யப்பட்ட 14 மீனவர்களும் விரைவில் தமிழகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM