யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் பகுதியில் நேற்று பிற்பகல் கடலில் நீராடிவிட்டு மீண்டும் அருகில் இருந்த நீர்த்தேக்கத்தில் நீராட வந்த 15 வயது சிறுமியொருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சியை சேர்ந்த குறித்த சிறுமி கற்கோவளம் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு வந்திருந்த நிலையில் நான்கு நண்பர்களுடன் கடற்கரைக்கு அருகிலுள்ள நீர்த்தேக்கத்தில் நீராடிக்கொண்டிருந்த போதே நீரில் மூழ்கியுள்ளார்.
சிறுமியோடு நீராடிய நண்பர்கள் சிறுமி நீரில் மூழ்கி தத்தளித்துக்கொண்டிருந்ததை கண்டு கூக்குரலிட, அருகிலுள்ள இராணுவத்தினர் அச்சிறுமியை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்த்துள்ள நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த சிறுமி அலன்மேரி ஆனந்தராஜா எனும் 15 வயதுடையவர் ஆவார்.
குறித்த யுவதியின் மரணம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM