பொதுஜன பெரமுனவின் அரசியல் கூட்டங்களையும் செயற்பாடுகளையும் பிற்போடுமாறு வலியுறுத்தியுள்ளோம் - செஹான் சேமசிங்க

Published By: Digital Desk 2

20 Nov, 2022 | 07:42 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசியல் காரணிகளுக்கு முன்னுரிமை வழங்குவதை விட பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்குவது தற்போதைய நிலையில் அத்தியாவசியமானது.

பொதுஜன பெரமுனவின் அரசியல் கூட்டங்களையும்,அரசியல் செயற்பாடுகளையும் தற்காலிகமாக பிற்போடுமாறு ஆளும் கட்சி குழு கூட்டத்தில் வலியுறுத்தினோம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியல் செய்யும் நிலையில் நாடு தற்போது இல்லை.பொருளாதார நெருக்கடிக்கு யார் காரணம் என ஒருவருக்கொருவர் விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருந்தால், சேறு பூசல்கள் மாத்திரமே மிகுதியாக இருக்கும்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எமது அரசாங்கம் எடுத்த ஒருசில பிரபல்யமான தீர்மானங்கள் பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தியது என்பதை வெளிப்படை தன்மையுடன் ஏற்றுக் கொண்டுள்ளோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், எமக்கும் இடையில் அரசியல் கொள்கை வேறுபாடு உண்டு.நாடு மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்ட போது அவர் மாத்திரம் தான் சவால்களை தற்துணிவுடன் பொறுப்பேற்றார்.

பொருளாதார மீட்சிக்காக ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்களுக்கு அரசியல் நோக்கத்திற்கு அப்பாற்பட்ட வகையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளும் முயற்சி துரதிஷ்டவசமாக தோல்வியடைந்தால் சமூக கட்டமைப்பு மிக மோசமாக பாதிக்கப்படும், ஆகவே சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எதிர்க்கட்சியினர் செயற்ட வேண்டும்.

அரசியல் காரணிகளுக்கு முன்னுரிமை வழங்குவதை விட பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்குவது தற்போதைய நிலையில் அத்தியாவசியமானது.

பொதுஜன பெரமுனவின் கூட்டங்களையும்,அரசியல் செயற்பாடுகளையும் தற்காலிகமாக பிற்போடுமாறு ஆளும் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளோம்.

தேர்தல் இடம்பெறும் காலத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரம் செய்துக் கொள்ளலாம்.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாமல் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது.

நாட்டில் ஸ்தீரமான அரசாங்கம் எதிர்காலத்தில் தோற்றம் பெற வேண்டுமாயின் பொருளாதார பாதிப்புக்கு குறுகிய காலத்தில் தீர்வு காணப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54
news-image

நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணையுமாறு வலியுறுத்தி...

2023-09-29 18:10:31
news-image

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து...

2023-09-29 17:27:37
news-image

ஜனாதிபதி ரணில் - ஐரோப்பிய கவுன்சில்...

2023-09-29 17:36:25