(எம்.மனோசித்ரா)
பஷில் ராஜபக்ஷவின் வருகையுடன் அரசாங்கத்தினுள் அரசியல் நெருக்கடிகள் மேலும் தீவிரமடையும் என்பது தெளிவாகிறது. பொதுஜன பெரமுனவில் அமைச்சுப்பதவிகளை கோரும் 10 பேருக்கு அதனைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே பஷில் ராஜபக்ஷ மீண்டும் வருகை தந்துள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
மீண்டும் நாட்டுக்கு வருகை தந்துள்ள பஷில் ராஜபக்ஷவை வரவேற்பதற்காக பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் விமான நிலையத்திற்குச் சென்றிருந்தனர்.
உண்மையில் அவர்களுக்கு பதிலாக குற்றத்தடுப்பு பிரிவினரே அங்கு சென்றிருக்க வேண்டும். விமான நிலைத்திலேயே அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.
எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருக்கும் வரையில் அவ்வாறு எதுவும் இடம்பெறாது என்பதை நாம் நன்கு அறிவோம்.
பொருளாதாரக்குற்றமிழைத்த நபரை வரவேற்பதற்காக மாலையுடன் விமானம் நிலையம் சென்றவர்களின் மூளையை சோதனை செய்ய வேண்டும்.
பொதுஜன பெரமுனவிலுள்ள சிரேஷ்ட தலைவர்கள் மேலும் 10 அமைச்சுக்களை கோரிக் கொண்டிருக்கின்றனர். அவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்காகவா பஷில் ராஜபக்ஷ வருகை தந்துள்ளார் என்ற கேள்வி எழுகிறது.
அவ்வாறில்லை எனில் பிளவடைந்துள்ள பொதுஜன பெரமுனவை ஒன்றிணைப்பதற்காக வருகை தந்துள்ளாரா என்ற கேள்வியும் எழுகிறது.
பஷில் ராஜபக்ஷவின் வருகையுடன் அரசாங்கத்தினுள் பாரிய அரசியல் நெருக்கடிகள் தோற்றம் பெறவுள்ளமை தெளிவாகத் தெரிகிறது.
அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சியில் பொதுஜன பெரமுன பல குழுக்களாகப் பிளவடைந்துள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM