(எம்.மனோசித்ரா)
எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய மாதத்தில் ஒரு முறை விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இது தொடர்பான யோசனை திங்கட்கிழமை (20) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
பெற்றோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வு நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
எரிபொருள் விலை சூத்திரம் மாதத்திற்கு இரண்டு முறை, ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இருப்பினும், விநியோகத்தர்களுக்கு நிதி இழப்பு ஏற்படும் என்பதால், இரண்டு நாட்களுக்கு முன்பு முற்பதிவு செய்யாமல் இருப்பது அவதானிக்கப்பட்டது.
எனவே, எரிபொருள் விலை சூத்திரத்தை மாதத்திற்கு ஒருமுறை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். இது தொடர்பான யோசனை இவ்வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM