(எம்.ஆர்.எம்.வசீம்)
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாப்பது என்ற இரண்டு விடயங்களையும் பாதுகாக்கும் வகையில் சமாந்திரமான சட்டம் ஒன்றை அமைத்து வருகின்றோம். அதுதொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்போம் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி புதிய சட்டம் கொண்டுவர எடுத்து வரும் நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை தெரிவித்து வந்தாலும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, புதிய சட்டம் கொண்டுவருவதாக நாங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.
அதன் பிரகாரம் இதுதொடர்பாக விசேட நிபுணர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டு, சட்டவரைபு தயாரிக்கப்பட்டு வருகின்றது. அதனால் இதுதொடர்பாக யாரும் கவலைப்பட தேவையில்லை.
அத்துடன் பயங்கரவார தடைச்சட்டத்தை நீக்குவதாக நாங்கள் தெரிவிப்பதனை யாரும் பிழையாக விளங்கிக்கொள்ளக் கூடாது. ஏனெனில் பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இல்லாமலாக்கி, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதல்ல. நாங்கள் தயாரிக்கும் புதிய சட்டமூலத்துக்கு தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
மேலும் அரசியல் பழிவாங்களுக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தை நாங்கள் பயன்படுத்தியதில்லை. 2015இல் இருந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் வரைக்கும் இந்த சட்டத்தை நாங்கள் செயற்படுத்தவும் இல்லை யாரையும் கைதுசெய்யவும் இல்லை. கடந்த காலங்களில் ஏற்பட்ட கலவர நிலைமையில், இரண்டு பேர் மாத்திரமே போராட்டம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அந்த விடயமும் தற்போது தீர்க்கப்பட்டு, அவர்கள் இருவரும் தற்போது நீதிமன்றத்துக்கு ஆஜர்படுத்தப்பட்டு, சாதாரண சட்டத்தின் கீழே அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
எனவே நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாப்பது என்ற இரண்டு விடயங்களையும் பாதுகாக்கும் வகையில் சமாந்திரமான சட்டம் ஒன்றை அமைப்போம். இதுதொடர்பான சட்டமூலத்தை எதிர்வரும் சில மாதங்களில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க இருக்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM