காங்கேசன்துறையில் இருந்து மட்டக்களப்பு வரையில் மீன்பிடியில் ஈடுபடுவேர் உடன் கரைக்கு திரும்புமாறு வளிமண்டல திணைக்களம் வேண்டுகோள்

Published By: Vishnu

20 Nov, 2022 | 10:23 PM
image

(கனகராசா சரவணன்)

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம்; காரணமாக 60 கிலோமீற்றர் வேகத்தில் கற்று வீசுவதால் காங்கோசன்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடுவோர் உடனடியாக கரைக்கு திரும்புமாறு இன்று ஞாயிற்றுக்கிழமை (20) வளிமண்டல திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வளிமண்டல திணைக்கள பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஷ் தெரிவித்தார்.

தென்கிழக்கு வங்க கடலில் உருவாகிய இருந்து கறைந்த காற்றழுத்த தாழ் பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்காள விரிகுடாவில் மத்திய பகுதிகளில் காணப்படுகின்றது.

இது மேற்கு வடமேற்கு திசையில் தொடர்ந்தும் நகர்ந்து கடந்த 24 மணிநேரத்தில் தென்மேற்கு வங்ககடலில் படிப்படியாக வலுவடைந்து காற்றழுக்க தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகம் புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகின்றது

இதனால் நெட்டாங்கு 5 தொடக்கம் 20 பாகையிலும் அதநான்னு 80 தொடக்கம் 90 பாகைக்கும் இடைப்பட்ட கடல்பகுதிகளில் காற்றின் வேகம் வலுத்து 50 தொடக்கம் 55 கிலோமீற்றர் வரை காற்று வீசும்.

இவ் கடல் பிரதேசங்களில் சில சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் 60 கிலோ மீற்றர்வரை அதிகரிக்க கூடிய சந்தர்ப்பமும் காணப்படுகின்றதுடன் கடற்பரப்பின் மேல் மழையே அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது அத்துடன் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்.  

காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட கடல் பரப்புக்களில் கடல் அலையின் வீதம் 2 தொடக்கம் 3 மீற்றர்வரையில் காணப்படும்.

எனவே காங்கோசன்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளுக்கு மீனவர்களும் கடலில் பயணம் செய்வோரும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்;.

மேற்குறிய கடல் பகுதிகளில் மீன்பிடிப்பவர்கள்  உடனடியாக கரையோரங்களுக்கு திரும்பவும் அல்லது பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறித்தப்படுகின்றார்கள் இது தொடர்பாக வளிமண்டல திணைக்களத்தால் வெளியிடப்பட்ட எதிர்கால முன்னறிவிப்புக்களை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தென் மேற்கு வங்காள விரிகுடாவிலும் அதன் ஒட்டிய வங்காள விரிகுடாவிலும் உருவாகி இருக்கின்ற தாழ் அமுக்கம்; காரணமா நாட்டின் வடக்கு வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும்  அவ் அப் போது  மணித்திலாயத்திற்கு 40 தொடக்கம் 50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் வடக்கு வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஓரளவு மழை பெய்ய கூடும் நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான கால நிலை காணக்கூடும் என அவர் தெரிவித்தார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51