(எம்.வை.எம்.சியாம்)
நாட்டின் இருவேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள் வேககட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து சம்பவங்கள் 19 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொஸ்கம
கொஸ்கம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கடுகொட-கொஸ்கம பிரதான வீதியின் ஹெடவத்த பிரதேத்தில் கடுகொடையிலிருந்து கொஸ்கம நோக்கி பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி அருகிருந்த மதிலில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன் போது பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் சாலவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 34 வயதுடைய ஒருவர் எனவும் அவர் அரப்பன்கம,கொஸ்கம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் கொஸ்கம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கல்கமுவ
கல்கமுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாதெனிய-அநுராதபுரம் பிரதான வீதியின் புலஞ்சிவிய குளத்திற்கு அருகில் கல்கமுவ யிலிருந்து அநூரதபுரம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் போது காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணித்த நபர் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
உயிரிழந்தவர் 37 வயதுடைய ஒருவர் எனவும் அவர் தம்புத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கல்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM