அரசாங்கத்தை கண்காணிக்கும் அதிகாரத்தை எதிர்க்கட்சிக்கு வழங்காவிட்டால் ஒத்துழைப்பு வழங்க முடியாது - கிரியெல்ல

Published By: Nanthini

19 Nov, 2022 | 02:04 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமாயின், பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுக்களின் தலைமைத்துவ பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும். 

அரசாங்கத்தை கண்காணிக்கும் அதிகாரம் எமக்கு வழங்காவிட்டால், அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என எதிர்க்கட்சிகளின் பிரதம கோலாசான் லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (நவ 19) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, 

பாராளுமன்ற தெரிவுக்குழு மற்றும் துறைசார் மேற்பார்வை குழுக்கள் தொடர்பில் கட்சித் தலைவர் கூட்டத்தில் எமது நிலைப்பாட்டை குறிப்பிட்டுள்ளோம்.

பல ஆண்டுகால அரசியல் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்ற தெரிவுக்குழுக்களின் தலைமைத்துவ பதவியை எதிர்க்கட்சிகளுக்கு கோரினோம்.

பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் பாராளுமன்றத்தில் கோப் மற்றும் கோபா உள்ளிட்ட குழுக்களின் தலைமைத்துவத்தை எதிர்க்கட்சிகளுக்கு வழங்கவில்லை.

முக்கிய குழுக்களின் தலைமைத்துவத்தை தனதாக்கி நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றது.

அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்காணித்து, தவறுகளை சுட்டிக்காட்டுவதற்காகவே பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுக்கள் உருவாக்கப்பட்டன.

அரசாங்கத்தின் தரப்பினர் கண்காணிப்பு குழுக்களின் தலைவர் பதவியை வகிக்கும்போது அரசாங்கத்தின் செயற்பாடுகள் எவ்வாறு கண்காணிக்கப்படும்.

பாராளுமன்றத்தின் நிலையியல் கட்டளையை நீக்கி, அரச நிதி தொடர்பான குழுவின் தலைமைத்துவம் ஆளுந்தரப்பினருக்கு வழங்கப்பட்டது. 

பாராளுமன்ற நிலையியல் கட்டளையின் பிரகாரம், அரச நிதி தொடர்பான குழுவின் தலைமைத்துவம் எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட்டிருந்ததால், 2020ஆம் ஆண்டு நாடு வங்குரோத்து நிலையை அடைந்துவிட்டது என்பதை பகிரங்கப்படுத்தியிருப்போம்.

அனைத்து விடயங்களும் மறைக்கப்பட்டன. மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டதன் பின்னர் இவ்வருடம் தான் நாடு வங்குரோத்து நிலையை அடைந்துவிட்டது என்பதை நாங்கள் அறிந்தோம். உண்மை பகிரங்கப்படுத்தப்பட்டது. 

எமது ஒத்துழைப்பு தேவையாயின், பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுக்களின் தலைமைத்துவ பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும். அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்காணிக்காமல் ஒத்துழைப்பு வழங்க முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32