மெதகம உள்ளூராட்சி சபை உறுப்பினர் ஒருவரால் நடத்தப்பட்டதாக கூறப்படும் பாரியளவிலான சூதாட்ட நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டு, ஒரு தொகை பணத்துடன் 8 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மெதகம பகினிகஹவெல பகுதியில் உள்ள மூடிய கராஜ் ஒன்றில் மதுபோதையில் பணத்துக்காக சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோதே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது கைதுசெய்யப்பட்ட மெதகம உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் உட்பட மொனராகலை, நக்கல, புத்தல ஆகிய பகுதிகளில் வசிக்கும் சந்தேக நபர்களிடமிருந்து 40,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த சூதாட்ட நிலையத்தில் தோற்கடிக்கப்பட்டவர்களின் கார்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் அடகு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் விடயம் தொடர்பிலும் பொலிஸாரினால் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM