கால்களிலுள்ள கருமையைப் போக்கி, கால்களை அழகாக வைத்துக்கொள்ள எடுத்துக் கொள்ளும் சிகிச்சைகளே பெடிக்யூர். அதை வீட்டிலேயே எப்படி செய்து கொள்ளலாம் என்பதை பார்ப்போம்:
முதலில் கால்விரல் நகங்களில் நெயில் பொலிஷ் இருந்தால், அதை நல்ல தரமான நெயில் பொலிஷ் ரிமூவர் கொண்டு நீக்கி, பின்பு ஒரு அகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் 1 தேக்கரண்டி ஷெம்பு சேர்த்து பின் அதனுள் கால்களை 5 நிமிடம் ஊற வைத்து, பிரஷ் கொண்டு கால்களை தேய்த்து வெளியே எடுத்து, துணியால் துடைக்கவும்.
அடுத்து அகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை பாதியாக நிரப்பி, அதில் 1 தேக்கரண்டி தேன் மற்றும் பாதி எலுமிச்சையைப் பிழிந்து, எலுமிச்சை தோலை நீரிலேயே போட்டு, கால்களை நீரில் மீண்டும் 5 நிமிடம் ஊற வைத்து, பின் எலுமிச்சை தோலைக் கொண்டு தேய்க்க வேண்டும்.
பிறகு பியூமிக் கல் பயன்படுத்தி, குதிகால்களை நன்கு தேய்த்து விட்டு, கால்களை வெளியே எடுத்து துணியால் துடைக்க வேண்டும்.
ஒரு பௌலில் 2 தேக்கரண்டி கோப்பி பொடி, 2 தேக்கரண்டி சர்க்கரை, 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் பாதி எலுமிச்சையைப் பிழிந்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை கால்களில் தடவி 5 நிமிடம் ஊற வைக்கவும். பின்பு கையால் கால்களை சிறிது நேரம் தேய்த்து, சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.
இறுதியில் கெட்டியான ஏதேனும் ஒரு மொய்ஸ்சுரைசரை கால்களில் தடவி, மென்மையாக 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இந்த முறையில் மாதம் இருமுறை பெடிக்யூர் செய்து வந்தால் கால்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கி பாதம் அழகாக இருக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM