வீட்டிலேயே பெடிக்யூர் செய்யலாம்...

Published By: Devika

18 Nov, 2022 | 03:17 PM
image

கால்களிலுள்ள கருமையைப் போக்கி, கால்களை அழகாக வைத்துக்கொள்ள எடுத்­­­­துக் கொள்ளும் சிகிச்சைகளே பெடிக்­யூர். அதை வீட்டிலேயே எப்படி செய்து கொள்ள­லாம் என்பதை பார்ப்போம்:

முதலில் கால்விரல் நகங்­களில் நெயில் பொலிஷ் இருந்­­­தால், அதை நல்ல தர­­மான நெயில் பொலிஷ் ரிமூவர் கொண்டு நீக்கி, பின்பு ஒரு அகன்ற பாத்திரத்தில் வெது­வெதுப்­பான நீரை நிரப்பி, அதில் 1 தேக்கரண்டி ஷெம்பு சேர்த்து பின் அதனுள் கால்­களை 5 நிமிடம் ஊற வைத்து, பிரஷ் கொண்டு கால்­களை தேய்த்து வெளியே எடுத்து, துணியால் துடைக்க­வும்.

அடுத்து அகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை பாதி­யாக நிரப்பி, அதில் 1 தேக்­கரண்டி தேன் மற்றும் பாதி எலு­­மிச்சையைப் பிழிந்து, எலு­­மிச்சை தோலை நீரிலேயே போட்டு, கால்­களை நீரில் மீண்­டும் 5 நிமிடம் ஊற வைத்து, பின் எலு­மிச்சை தோலைக் கொண்டு தேய்க்க வேண்டும். 

பிறகு பியூமிக் கல் பயன்­படுத்தி, குதி­கால்­களை நன்கு தேய்த்து விட்டு, கால்களை வெளியே எடுத்து துணியால் துடைக்க வேண்­டும்.

ஒரு பௌலில் 2 தேக்கரண்டி கோப்பி பொடி, 2 தேக்கரண்டி சர்க்கரை, 1 தேக்கரண்டி கற்­றாழை ஜெல் மற்றும் பாதி எலு­மிச்சையைப் பிழிந்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்­டும். பின் அதனை கால்­களில் தடவி 5 நிமிடம் ஊற வைக்கவும். பின்பு கையால் கால்­களை சிறிது நேரம் தேய்த்து, சுத்தமான நீரில் கழுவ வேண்­டும்.

இறுதி­யில் கெட்டியான ஏதே­னும் ஒரு மொய்ஸ்­­சுரை­சரை கால்களில் தடவி, மென்மை­யாக 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இந்த முறையில் மாதம் இருமுறை பெடிக்­யூர் செய்து வந்தால் கால்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கி பாதம் அழகாக இருக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right