பொலிஸாருக்கு தகவலளிக்காமை குறித்த பயங்கரவாத தடைச் சட்ட வழக்கு : பிரதிவாதியை நீதிமன்றில் ஆஜர் செய்ய உத்தரவு

Published By: Vishnu

17 Nov, 2022 | 07:32 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய தகவல்களை அறிந்திருந்தும் அந்த தகவலை பொலிஸாருக்கு அறிவிக்காமை குறித்து தொடரப்பட்டுள்ள வழக்கில்,  பிரதிவாதியை எதிர்வரும் திங்களன்று நீதிமன்றில் ஆஜர்செய்ய வேண்டும் என நுவரெலியா மேல் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டது.

மொஹம்மட் சமீர் எனும் நபருக்கு எதிராக  பயங்கரவாத தடை சட்டத்தின் 5 ஆம் அத்தியாயத்தின் அ, ஆ பிரிவுகளின் கீழ் நுவரெலியா மேல் நீதிமன்றில் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 இது குறித்த வழக்கு இன்று (17) விசாரணைக்கு வந்த போதும், பிரதிவாதியை நீதிமன்ரில் ஆஜர் செய்ய சிறைச்சாலைகள் அதிகாரிகள் தவறியிருந்தனர்.

அத்துடன் சட்ட மா அதிபர் சார்பிலான பிரசன்னமும் இருக்கவில்லை.  பிரதிவாதிக்காக சட்டத்தரணி இம்தியாஸ் வஹாபுடன் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் பிரசன்னமாகியிருந்தார்.

இந் நிலையிலேயே பிரதிவாதியை எதிர்வரும் திங்களன்று நீதிமன்றில் ஆஜர் செய்ய வேண்டும் என நுவரெலியா  மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காணாமல்போன பாடசாலை மாணவி சடலமாக மீட்பு

2023-12-11 18:34:53
news-image

ரணிலும் சஜித்தும் ஒருபோதும் இணையப்போவதில்லை :...

2023-12-11 18:31:27
news-image

கிராம சேவகரின் வேலையை பொலிஸார் பார்க்கக்...

2023-12-11 13:40:57
news-image

கம்பஹாவில் நகை அடகுக் கடையில் கொள்ளை

2023-12-11 18:24:12
news-image

பெறுதிமதி சேர் வரி திருத்தச் சட்ட...

2023-12-11 17:59:32
news-image

யாழ். பல்கலை முன்னாள் கலைப்பீட மாணவர்...

2023-12-11 17:44:17
news-image

லொறியால் மோதிய வயோதிபரை வைத்தியசாலைக்கு கொண்டு...

2023-12-11 18:28:47
news-image

மதுபான சாலைகளை காட்டி சுற்றுலா பயணிகளை...

2023-12-11 18:32:29
news-image

எரிபொருள் விலை அதிகரிப்பினால் கடற்றொழிலாளர்களின் பாதிப்புக்கு...

2023-12-11 16:58:39
news-image

மலையக மக்கள் குறித்து பேச்சு வார்த்தை...

2023-12-11 16:59:13
news-image

பேலியகொடையில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

2023-12-11 17:08:33
news-image

யாழ்.நகர் பகுதியில் அதிகரித்துள்ள வழிப்பறிக் கொள்ளை

2023-12-11 17:06:33