45 இலங்கையர்கள் ISIS உடன் : புலனாய்வுத் துறை அதிரடி தகவல்

Published By: Robert

28 Dec, 2015 | 11:14 AM
image

இலங்கையிலுள்ள 9 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் இணைந்துகொள்வதற்காக சிரியா சென்றுள்ளதாக புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக சர்வதேச நாடுகள் இரண்டிலிருந்து இலங்கைக்கு தகவல்கள் வழங்கியுள்ளதாகவும் இன்றைய சிங்கள தேசிய ஊடகமொன்று அறிவித்துள்ளது.

இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு தெரிவிப்போர் அதிகரித்து வருவதாக புலனாய்வுத் துறையினர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு இரகசிய அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அதிகமானோர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்கு ஆதரவு வழங்குவோர் கிழக்கு மாகாணத்தில்தான் இருப்பதாக நம்பி வந்தனர். ஆனால், புலனாய்வுத் துறையினரின் தகவல்களின் படி அவர்கள் குருணாகலை, கண்டி, கொலன்னாவை ஆகிய பிரதேசங்களில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது எனவும் அந்த ஊடகம் முன்பக்க செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36