(இராஜதுரை ஹஷான்,எம்,ஆர்.எம்.வசீம்)
பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளில் மக்கள் விடுதலை முன்னணி போன்ற அரசியல் கட்சிகள் ஏதும் கிடையாது.
நாட்டில் மீண்டும் போராட்டத்தை ஏற்படுத்த மக்கள் விடுதலை முன்னணியினரும், முன்னிலை சோசலிச கட்சியினரும் முயற்சிக்கிறார்கள். உண்மை நிலைவரத்தை அறிவார்ந்த மக்கள் விளங்கிக் கொள்வார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (நவ. 17) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பொருளாதார பாதிப்பு,வெளிநாட்டு கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் சமரப்பிக்கப்பட்டுள்ளது. நாடு என்ற ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழ வேண்டும்.
சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த அனைத்து அரச தலைவர்களும் தற்போதைய பொருளாதார பாதிப்பிற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்ற நிலைப்பாட்டை மக்கள் ஆதரவு ஊடாக ஆட்சிக்கு வர முடியாத அரசியல் தரப்பினர்கள் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.
பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த நாடுகளில் மக்கள் விடுதலை முன்னணி போன்ற அரசியல் கட்சிகள் ஏதும் கிடையாது, குறுகிய அரசியல் நோக்கத்திற்காக நாட்டில் தொடர்ச்சியாக இடம் பெற்ற கலவரம், 30 ஆண்டு கால யுத்தம் நாட்டை பின்னோக்கி சென்றது. பொருளாதார பாதிப்பு இவ்வாறான காரணிகளினால் தீவிரமடைந்தது.
பொருளாதார பாதிப்பை மக்கள் விடுதலை முன்னணி அரசியல் நெருக்கடியாக மாற்றியமைத்தது. நாட்டில் மீண்டும் போராட்டத்தை ஏற்படுத்த மக்கள் விடுதலை முன்னணியினரும்,முன்னிலை சோசலிச கட்சியினரும் முயற்சிக்கிறார்கள். போராட்டங்களினால் பொருளாதார பாதிப்பிற்கு தீர்வு காண முடியாது என்பதை அறிவார்ந்த மக்கள் நன்கு அறிவார்கள்.
குறுகிய அரசியல் நோக்கத்திற்காக முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் கலந்துக் கொள்வதை இளைஞர் யுவதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். நாட்டு மக்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்க முடியாதவர்கள் இளைஞர்களை பலியாக்கி ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள்.
ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கமும்,ஆட்சியாளர்களும் மோசடி செய்துள்ளதாக குறிப்பிடும் தரப்பினர் இதுவரை எவ்வித சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை மாறாக பொய் குற்றச்சாட்டுக்களை மாத்திரம் முன்வைத்துக் கொள்கிறார்கள்.
அரசியல்வாதிகள் அரச நிதியை மோசடி செய்திருந்தால் உரிய நடவடிக்கையை எடுங்கள், நடைமுறையில் உள்ள சட்டங்கள் தடையாக காணப்பட்டால் புதிய சட்டத்தை உருவாக்க முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM