(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)
இறக்குமதி செய்யப்படும் 630 பொருட்களுக்கு தீர்வை வரி அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. அதில் பாடசாலை உபகரணங்களும் அடங்குகின்றன.
இதன் காரணமாக பாடசாலை உபகரணங்களின் விலை நூற்றுக்கு 300வீதம் விலை அதிகரிக்கம் நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் தீர்வை வரியில் இருந்து பாடசாலை உபகரணங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (நவ. 17) இடம்பெற்ற வரவு - செலவுத் திட்டம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசாங்கம் வருமானத்தை தேடிக்கொள்ள வரிகளை அதிகரித்திருக்கின்றது. தற்போது இறக்குமதி செயய்ப்படும் 630 பொருட்களுக்கு தீர்வை வரி அதிகரித்து வர்த்தமானி அறவிப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.
இதன் காரணமாக பாடசாலை பொருட்களுக்கு நூற்றுக்கு 300வீதம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
குறிப்பாக 10 ரூபாவுக்கு இருந்த பென்சில் 40ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது. அதேபோன்று பென்rசில் சீவும கட்டர், பேனை போன்றவையும் பாரியளவில் அதிகரி்க்கப்படுகின்றது.
சீ,ஆ. கொப்பி புத்தகம் ஒன்று 800ரூபாவரை அதிகரிப்பதாக தெரிவிக்கப்படிருக்கின்றது. இவ்வாறு இருந்தால் அடுத்த வருடம் பாடசாலை ஆரம்பிக்கும்போது பெற்றோர்கள் பாரிய கஷ்டத்துக்கு முகம்கொடுக்க நேரிடுவார்கள்.
அதனால் பாடசாலை உபகரணங்களை தீர்வை வரியில் இருந்து விடுவிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
அத்துடன் நாட்டில் விலை கட்டுப்பாடு இல்லை. அதனால் நினைத்து பிரகாரம் வியாபாரிகள் பொருட்களை விற்பனை செய்கின்றனர்.
அரசாங்கம் ஒன்று இருக்கின்றதா என்பதற்கு சிறந்த உதாரணம்தான் விலைக்கட்டுப்பாடு. விலை கட்டுப்பாடு இல்லை என்றால் நாட்டில் அரசாங்கம் இல்லை என்றே அர்த்தம். எனவே அரசாங்கம் கெளரவமான முறையில் பதவி விலகி தேர்தலுக்கு செல்லவேண்டும் என்றார்.
.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM