மத்திய வங்கி ஆளுநரையும் அரசாங்கத்தையும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்ப வேண்டும் - கம்மன்பில

Published By: Digital Desk 2

17 Nov, 2022 | 04:12 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்,ஆர்.எம்.வசீம்)

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நாணயம் அச்சிடலுக்கு அடிமையாகியுள்ளார். கப்ராலின் சாதனையை இவர் குறுகிய காலத்திற்குள் முறியடித்துள்ளார்.

ஆகவே மத்திய வங்கியின் ஆளுநரையும், இந்த அரசாங்கத்தையும் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு அனுப்ப வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (நவ.17) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மத்திய வங்கியின் ஆளுநருக்கும்,ஜனாதிபதிக்கும் சொல்வதை செய்யும் பழக்கம் கிடையாது. எல்லையற்ற நாணயம் அச்சிடல் பணவீக்கத்தை அதிகரித்து பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தியதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்நலால் வீரசிங்க பதவி ஏற்ற போது குறிப்பிட்டார். ஆனால் இவரே குறுகிய காலத்தில் அதிக நாணயம் அச்சிட்ட மத்திய வங்கி ஆளுநராக வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் பேராசிரியர் லக்ஷ்மன் 2020 மார்ச் மாதம் முதல் 2021 செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 1260 பில்லியன் திறைச்சேரி விலைபத்திரங்களை வெளியிட்டார்.ஒரு நாளைக்கு அவர் 2.1 பில்லியன் நாணயத்தை அச்சிட்டார்.

இவரை தொடர்ந்து மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்ற அஜித் நிவார்ட் கப்ரால் 2021 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாளொன்றுக்கு 2.2 பில்லியன் நாணயத்தை அச்சிட்டு முன்னாள் ஆளுநர் லக்ஷ்மனின் சாதனையை முறியடித்தார்.

இவரை தொடர்ந்து மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்ற தற்போதைய ஆளுநர் நந்தலால் வீரசிங்க கடந்த ஏப்ல் மாதம் 06ஆம் திகதி முதல் கடந்த செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் நாளாந்தம் 3.37 பில்லியன் நாணயத்தை அச்சிட்டுள்ளார்.

ஆகவே நாணய அச்சிடலில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான லக்ஷ்மன், கப்ரால் ஆகியோர் அடைந்த சாதனையை மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் நந்தலால் வீரசிங்க முறியடித்துள்ளார்.

வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியாது,நாடு வங்குரோத்து நிலை அடைந்து விட்டது என அறிவிக்கப்பட்டதன் பின்னணியில் ஏன் நாணயம் அச்சிடப்படுகிறது என்பது கேள்விக்குறியானதாகும். அரச வருமானம் வீழ்ச்சியடையும் போது நாணயம் அச்சிட்டு அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31