எரிபொருள் மோசடியில் கைதான பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்

Published By: Nanthini

16 Nov, 2022 | 12:45 PM
image

பெற்றோல், டீசல் முதலிய எரிபொருட்களை பெற்றுத் தருவதாக கூறி பிரதேச மக்களிடம் பணம் வசூலித்து, மோசடி செய்த குற்றச்சாட்டில் யாழ். பலாலி பொலிஸ் அதிகாரியொருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (நவ 15) கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கடந்த காலத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டின்போது பெற்றோல், மண்ணெண்ணெய், டீசலை பெற்றுக்கொள்ள முடியாமல் மக்கள் திண்டாடிய நிலையில், பலாலி பிரதேச மக்கள் பலரிடம் பெற்றோல், மண்ணெண்ணெய், டீசல் முதலிய எரிபொருட்களை தானே பெற்றுக்கொடுப்பதாக கூறி பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் அதிகாரியொருவர் பிரதேச மக்களிடம் பணம் வசூலித்து, பின்னர் எரிபொருள்களை பெற்றுத் தராமல் ஏமாற்றியுள்ளார்.

அதில் நபரொருவரிடம் மாத்திரம் எரிபொருள் பெற்றுத் தருவதற்காக ஐந்து இலட்சம் ரூபா பணத்தை வாங்கியுள்ளார்.  

குறித்த பொலிஸ் அதிகாரி பணத்தை வாங்கிக்கொண்டு எரிபொருளை நிரப்பிக்கொடுக்காத காரணத்தால் அந்த பிரதேசவாசி அதிகாரியிடம் பணத்தை மீளக் கேட்டுள்ளார். 

எனினும், அவர் பணத்தை திருப்பிக் கொடுக்காத நிலையில் பொலிஸ் அதிகாரியின் மோசடி விவகாரம் வட மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. 

அத்துடன், பணத்தை கொடுத்துவிட்டு ஏமாற்றப்பட்ட பிரதேசவாசிகள் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், நீதவானின் உத்தரவுக்கமைய அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  

அத்துடன் இந்த பண மோசடி தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21