வியட்நாமிலுள்ள 303 இலங்கையர்களுக்கு அவசியமான மனிதாபிமான உதவிகளை வழங்கல் குறித்து விரிவான கலந்துரையாடல்

Published By: Digital Desk 2

16 Nov, 2022 | 09:36 AM
image

(நா.தனுஜா)

வியட்நாமில் உள்ள 303 இலங்கைக் குடியேற்றவாசிகளுக்கு அவசியமான மனிதாபிமான உதவிகளை வழங்கவிருப்பதாக புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு அறிவித்துள்ள நிலையில், இவ்விவகாரம் தொடர்பில் அவ்வமைப்பின் பிரதிநிதிகளுக்கும் வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான விரிவான கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றுள்ளது.

வியட்நாம் கடற்பகுதியில் கடந்த 8 ஆம் திகதி மீட்கப்பட்ட 303 இலங்கைக் குடியேற்றவாசிகளுக்கு அவசியமான மனிதாபிமான உதவிகளை வழங்கவிருப்பதாக புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு நேற்று முன்தினம் திங்கட்கிழமை அறிவித்திருந்தது.

ஹனோயிலுள்ள இலங்கைத்தூதரகத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கை மற்றும் வியட்நாம் அரசாங்கங்கள், இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளிலுள்ள புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் முகவரகங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் முகவரமைப்புக்கள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைவை ஏற்படுத்தி சர்வதேச சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் ஏற்ப இலங்கைக் குடியேற்றவாசிகளுக்கு அவசியமான உதவிகளும் பாதுகாப்பும் வழங்கப்படுமென அவ்வமைப்பு தெரிவித்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் இலங்கைக்கிளையின் தலைவர் மற்றும் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் பணிப்பாளர் நாயகத்தின் இந்தியா, பூட்டான் ஆகிய நாடுகளுக்கான விசேட பிரதிநிதி ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது வியட்நாமில் உள்ள 303 இலங்கைக் குடியேற்றவாசிகள் விவகாரத்திற்குத் தீர்வுகாணல், அதில் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் ஒத்துழைப்பு மற்றும் இலங்கைக் குடியேற்றவாசிகளுடன் நிகழ்நிலை முறைமையின் ஊடாகத் தொடர்புகொள்ளல் ஆகிய விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58