(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)
அரசாங்கத்தின் எந்தவொரு வேலைத்திட்டங்களிலும் தமிழ் மக்களை புறக்கணிக்கவோ அல்லது கைவிடவோ மாட்டோம் . வடக்கு மக்களை புறக்கணிக்கவில்லை என நீதி,சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்ப மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (15) செவ்வாய்க்கிழமை வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதலாம் நாள் விவாதத்தின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையசரன் முன்வைத்த கருத்துகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
வடமாகாணத்தில் நிலவும் போதைப்பொருள் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய இரண்டு வாரங்களுக்கு முன்னர் நான் அங்கு சென்றிருந்த போது ஆளுநர் தலைமையில் விசேட செயலணி ஒன்றை அமைத்துள்ளேன்.
அதேபோன்று இது தொடர்பான சட்டங்களை இறுக்கப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் இதுபோன்று செயலணிகளை அமைத்து நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம். நாங்கள் வடக்கு மக்களின் பிரச்சினைகளை புறக்கணிக்கவில்லை.
இதேவேளை எவ்வித அழைப்பு இன்றி கடந்த வாரத்தில் யாழ்ப்பாணம் சென்றோம். அங்கே இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய 11 ஆயிரத்து 200 பேர் வரையிலானோர் உள்ளனர். அவர்களில் பலர் அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ் தொடர்பான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். அதன்படி அங்கு மூன்று நடமாடும் சேவைகளை நடத்தியுள்ளோம்.
அதேபோன்று யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கவும், அதனை இரட்டிப்பாக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்களையோ, உங்கள் சமூகத்தையோ நாங்கள் புறக்கணிக்கவோ, கைவிடவோ இல்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM