வீதிப் போக்குவரத்து விதிமீறல் தொடர்பான சட்டத்தை அமுல்படுத்தச் சென்ற போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து, தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தை கிழித்த சீன நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் இலங்கையில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரியும் (40) வயதுடைய சீனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று (13) கொள்ளுப்பிட்டியை அண்மித்த பகுதியில் சந்தேக நபர் வீதிப்போக்குவரத்துச் சட்டத்தை மீறி வாகனம் செலுத்தியதை கொழும்பு போக்குவரத்து கட்டுப்பாட்டு பாதுகாப்பு கெமரா கட்டுப்பாட்டு பிரிவினர் அவதானித்ததையடுத்து கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கொள்ளுப்பிட்டி பொலிஸின் போக்குவரத்து பிரிவு பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தேக நபரை துரத்திச் சென்று, அவரது வாகனத்தை நிறுத்தி, சட்டத்தை அமுல்படுத்தச் செல்லும்போது, பொலிஸ் கடமைக்கு இடையூறு விளைவித்ததால் அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் கோட்டை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM