(எம்.ஐ.எம்.றியாஸ்)
பொத்துவில் சுயாதீன இளைஞர் அமைப்பினர் பொத்துவில் பிரதேசத்திற்கென்று பொது விளையாட்டு மைதானம் வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து கொட்டும் மழைக்கு மத்தியில் இளைஞர்கள் ஆவேசத்துடன் இன்று (14) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொது மைதானத்திற்காக ஒன்றிணைவோம், அரசியல் பேதமில்லை, வேறுபாடு என்று மில்லை, ஓரணியில் நிற்போம், பேரணியாய் செல்வோம், இனவாதம் வேண்டாம், இளைஞ்சர்களுக்கு மைதானத்தை பெற்றுத்தா எனும் தொனிப் பொருளில் இப்பேரணி பொத்துவில் புட் சிட்டி அருகாமையில் ஆரம்பித்து பிரதான வீதி ஊடாக பொத்துவில் பிரதேச செயலகம் வரையும் கோசங்களை எழுப்பியவாறு சென்றனர். போக்குவரத்திற்கு எந்த விதமான இடைஞ்சலும் ஏற்படவில்லை.
பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஐ.பிர்னாசை பிரதான நுழைவாயிலுக்கு பேரணியினர் வரவழைத்து தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரினை பகிரங்கமாக வாசித்து அவரிடம் ஒப்படைத்தனர்.
இதன் போது பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர்.
இதன் போது பொத்துவில் பிரதேச செயலாளர் கருத்து தெரிவிக்கையில்,
இது விடயமாக உங்களது கோரிக்கையினை அம்பாறை மாவட்ட செயலாளருக்கு தெரியப்படுத்துகின்றேன். இது விடயமாக ஏற்கனவேயும் தெரியப் படுத்தியுள்ளேன். இதன் போது உங்களது ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு நீங்கள் கூறும் இடம் அரச காரணியாக இருக்கும் பட்சத்தில் பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் எனு அவர் இதன் போது தெரிவித்தார்.
இந்த மகஜரில் 30 விளையாட்டு கழகத்தினரும், 20 பாடசாலைகளும் ஒப்பமிட்டுள்ளனர்.இப் பேரணியில் சுமார் 500 மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM