அரச உத்தியோகத்தர்களின் ஓய்வு வயது 60 ஆக மட்டுத்தப்படும் : 5 தூதரக அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பு வழங்க ஜனாதிபதி மறுப்பு

Published By: Digital Desk 5

13 Nov, 2022 | 09:16 PM
image

அரச ஊழியர்களுக்கு 60 வயதுக்கு மேல் சேவை நீடிப்பு வழங்கப்படமாட்டாது என்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகதெரிய வருகிறது.

அந்த வகையில் ஐந்து தூதரக அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பு வழங்குமாறு கோரி வெளிவிவகார அமைச்சு விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்து விட் டதாக தகவல்கள் கூறுகின்றன.

இதில் நான்கு தூதுவர்களும் ஒரு உயர் ஸ்தானிகரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒருவர் ஏற்கனவே 60 வயதை அடைந்து விட்டார் எனவும் ஏனைய நான்கு பேரும் அடுத்த வருடம் 60 வயதை அடைய வுள்ள தாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை   இதர பல்வேறு அதிகாரிகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு முன்வைத்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் வெளிநாட்டு அலுவல்கள் சேவையில் நியமிக்கப்படும் அதிகாரிகள் 60 வயதை அடைந்தவுடன் அவர்களை சேவையில் இருந்தும் ஓய்வு பெற செய்யும் வகையில் நடவடிக்கைகள் தொடரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் றியாத் தூதுவரான பி.எ ம் .ஹம்சா, பிரசல்ஸ் தூதுவரான கிரேஸ் ஆசீர்வாதம், ஓமான் தூதுவரான சபருல்லாகான் , வார்சோ தூதுவரான எஸ்.டி.கே சேமசிங்க மற்றும் மாலைதீவு உயர் ஸ்தானிகராக ஏ.எம்.ஜே.சாதிக் ஆகியோருக்கே சேவை நீடிப்பு வழங்க ஜனாதிபதி மறுத்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெளிவிவகார அமைச்சு விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் தனது சேவைக்காலத்தை நிறைவு செய்யும் வகையில் ஹம்ஸாவுக்கு 2024 அக்டோபர் வரையிலும் ஆசீர்வாதத்துக்குஜூன் 2023 வரையிலும் திருமதி. சமரசிங்கவுக்கு  ஜூன்   2024 வரையிலும், 

ஏ .எ ம் .ஜே . சாதிக்குக்கு ஜனவரி 2025 வரையிலும், கானுக்கு செப்டம்பர் 2025 வரையிலும்சேவை நீடிப்பு  வழங்குமாறு கோரப்பட்டிருந்தது.

இதேவேளை இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் சேவையின் குறைந்த எண்ணிக்கையான தொழில் வல்லுநர்களே காணப்படுவதாகவும் தற்பொழுது சுமார் 50 பேர் அளவிலேயே இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33