வவுனியா தமிழ்ச் சங்கத்தின் அனுசரணையில் திரு. இளையதம்பி தருமபாலன் தொகுத்த மூன்று நூல்களின் வெளியீட்டு நிகழ்வு வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (நவ 13) காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது.
தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.பி.நடராசா கலந்துகொண்டிருந்தார்.
நிகழ்வில் வரவேற்புரையினை திருமதி. சி.குமாரதேவியும், வாழ்த்துரையினை சிவஸ்ரீ ஜெ.மயூர குருக்களும், நூல்களின் அறிமுகத்தை கலாசார உத்தியோகத்தர் சிவ.கஜேந்திரகுமாரும் நிகழ்த்தியிருந்தனர்.
அத்துடன் வேப்பங்குளம் ஞானவைரவர் ஆலய அறங்காவலர் பொ.நாகேந்திரம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் நூல்களின் முதல் பிரதிகளை பெற்றுக்கொண்டனர்.
'சைவசமய ஆலய வழிபாட்டு அமுதம்' நூலுக்கான நயவுரையை எஸ்.எஸ்.வாசனும், 'நாயன்மார்களின் வரலாறும் வழிபாடும்' நூலுக்கான நயவுரையை கி.உதயகுமாரும், 'திருவாசகம்' நூலை திருமதி. அனுஷா மதியழகனும் வழங்கினர். நன்றியுரையை வைத்திய கலாநிதி திருமதி. விமலா விஷ்வநாதன் நிகழ்த்தியிருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM