நின்றுகொண்டே சாப்பிட்டால்...

Published By: Devika

13 Nov, 2022 | 11:59 AM
image

நின்றுகொண்டே சாப்பிடுவது மன அழுத்தத்தை தூண்டும். அதோடு நாவின் சுவை அரும்புகளும் பாதிப்புக்குள்ளாகும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

பொதுவாகவே நிற்கும்போது புவி ஈர்ப்பு விசை­யின் காரணமாக இரத்தம் கீழ் நோக்கி பாயும். நின்றுகொண்டே சாப்பி­டும்­போது உடலின் கீழ்ப்பகுதியிலிருந்து இரத்­தம் மேல் நோக்கி செல்வ­தற்கு சிரமப்படும்.

இரத்தத்தை மேல்­நோக்கி எடுத்து செல்வதற்கு இதயம் சிரமப்பட வேண்டியிருக்கும். அதன் காரணமாக பிட்யூட்டரி சுரப்பியின் செயல்பாடுகளில் சீரற்ற தன்மை ஏற்படும். அது மன அழுத்தத்தை தூண்­டும் ஹோர்மோனான கார்டி­சாலின் அளவை அதிகப்படுத்தும். 

தொடர்ந்து நின்று கொண்டே சாப்பிடுவதை வழக்கமாக கொள்ளும்போது ஹோர்மோன்களில் மாற்றம் ஏற்படுவதோடு உணவின் சுவையை அறியக்கூடிய உறுப்புகளின் உணர் நரம்புகள் பாதிப்புக்­குள்ளாகும். நாளடைவில் உணவின் ருசியை அறியும் நாவின் சுவை அரும்புகளும் பாதிப்புக்குள்ளாகி ருசித்து சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுவிடும். 

சாப்பிடும்போது கால்களை மடக்கியவாறு தரையில் சம்மணம் போட்டு அமர்ந்து சாப்பிடுவதே சரியானது. இந்த ஆய்வுக்கு 350 பேர் உட்படுத்­தப்­பட்டனர். அவர்களில் நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்டவர்களை விட நின்று கொண்டு சாப்பிட்டவர்களின் செயல்பாடுகளில் சீரற்றதன்மை ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right